புதுதில்லி, ஜூலை 14- குடியரசுத் துணை தலைவர் தேர்தல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளன. இது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, அனைத்துக் கட்சிகளும் ஞாயிற்றுக்கிழமை கூடி, துணை குடியரசுத்தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிக்க உள்ளனர் என்றார். துணைக்குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது தற்போதைய துணைக்குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19 கடைசி நாள் ஆகும்.