புதுதில்லி, பிப். 23 - பாஜக-வுக்கு எதிராக தனித்தனி யாக போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மகா ராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘சாம்னா’வில் மேலும் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சிகள் கூட்டணி என்ற புதிர் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். பாஜக-வின் போலி தேசியவாதம் மற்றும் அடிப்படைவாதத்தின் விஷ த்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங் கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகி யோர் அந்தந்த மாநிலங்களில் பாஜக- வுடன் தனித்தனியாக போராடி வரு கின்றனர். இதுபோன்ற அரசியல் அணுகுமுறைக்கு எந்த அர்த்தமும் இல்லை. காங்கிரசை வெறுத்து ஒதுக்கிவிட்டு பாஜக-வை எதிர்த்து எப்படி போராட முடியும்?.
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் விவ காரம் குறித்து பின்னர் யோசித்துக் கொள்ளலாம். அதற்கு முன்பு பாஜக வுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்தாலோசித்து தங்களின் வியூகத்தை இறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை யை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும். பணமும் அதிகார ஆணவ மும் இன்றைய ஆட்சியாளர்களின் கைகளில் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன. நாடு தழுவிய அளவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட தன் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலிமையான மற்றும் முதிர்ச்சி பெற்ற தலைவராக உருவெடுத்துள் ளார். ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி- கவுதம் அதானியின் தொடர்பு குறித்து ராகுல் காந்தி மக்களவையில் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்து பேசும்போது, பிரதமர் பதில் சொல்ல முடியாமல் பல முறை தண்ணீர் குடித்ததை பார்க்க முடிந்தது. இதற்கு அர்த்தம் எதிர்க்கட்சி கள் ஒன்றிணைந்தால் 2024-ஆம் ஆண்டு பாஜக-வை தோற்கடிக்க முடியும் என்பதுதான். இவ்வாறு ‘சாம்னா’ தலை யங்கத்தில் கூறப்பட்டுள்ளது.