புதுதில்லி, நவ. 9 - கடந்த 5 ஆண்டுகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 மட்டுமே ஊதியம் உயர்த்தப்பட்டிருக் கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது. மிகவும் ஏழ்மையில் இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை நடத்துவதற்காக, குறிப்பிட்ட காலங் களில் நடைபெறும் பல்வேறு விவ சாயப் பணிகளில் குறைந்த கூலிக்கு வேலை செய்கின்றனர். இந்தியாவில், இத்தகைய விவசாயக் கூலித் தொழி லாளர்களின் எண்ணிக்கை தற்போது 14 கோடியாக உள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு களின்படி, கடந்த 5 ஆண்டுகளில், விவ சாயப் பணியில் ஈடுபடும் தொழிலா ளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு மிகமிகக் குறைவாக ரூ.15 மட்டுமே உயர்த்தப் பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் விழுக்காடு ஆண்டிற்கு 6 சத வீதம், ஐந்தாண்டுக்கு 29 சதவீதம் மட்டுமே. 2022 ஆகஸ்ட் மாதம் சேகரிக்கப் பட்ட தரவுகளின்படி விவசாயத் தொழிலா ளர்களின் ஒருநாள் ஊதியம் ரூ.343. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே, அதா வது பயிர்களின் தன்மைகளைப் பொறுத்து, நடவு செய்தல், களை யெடுத்தல், நீர்பாய்ச்சுதல் மற்றும் அறு வடை செய்தல் போன்ற ஏதேனும் பணி கள் மட்டுமே கிடைக்கின்றன. இதுவும் 10 முதல் 15 நாட்கள் வரைதான் தொட ர்ச்சியாக கிடைக்கும். அதன்பிறகு, பல வாரங்கள் அல்லது மாதங்கள் இடை வெளி இருக்கும். இதுவே ஆண்டு தோறும் நீடித்தால், வேளாண் பணிகள் முற்றாக நலிவடையும் நிலை உரு வாகிவிடும். ஆனால் இந்தத் தரவுகள் இத்துடன் முடியவில்லை. கிராமப்புற தொழி லாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின்படி, இந்த காலக்கட்டத் தில்தான் விலைவாசி 29 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சொற்ப அளவில் உய ரும் ஊதியத்தைகூட, இந்த விலைவாசி மிகக் கடுமையாக தாக்கி அழித்து விடுகிறது.
சாதிய மற்றும் பாலின பாகுபாடு
இந்த தரவுகள் ஆண் தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் ஊதியங் களைக் காட்டுகின்றன. பிற துறைகளை விட, வேளாண் பணியில் அதிகளவில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள் பாலின பாகுபாட்டால் பாதிக்கப்படு கின்றனர். உதாரணத்திற்கு 2022 ஆகஸ்ட் 20 ஆம் தேதியின்படி, ஆண் தொழிலாளர் தினக்கூலியாக ரூ.343 பெற்ற நிலையில், பெண் தொழிலாளர் தினக்கூலியாக ரூ.271 மட்டுமே பெற்றுள்ளார். ஆண் தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட இது 20 சதவீதம் குறைவானது. அனைத்து வகையான பணிகளிலும் இத்தகைய வேறுபாடுகள் நீடிக்கிற நிலையில், கிராமப்புற ஆண், பெண் தொழி லாளர்களிடமும் இந்நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில், பெரும்பாலும் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பு (எஸ்.சி.) மக்களே மிகக் குறைந்த கூலி பெறும் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. 2022 ஆகஸ்ட் தரவுகளின் படி, தூய்மைப் பணியாளர் களில் ஆண்களுக்கு சராசரியாக தினக்கூலி ரூ.290 வழங்கப்பட்ட நிலை யில், பெண்களுக்கு ரூ.269 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை வளர்க்க ஊதியத்தை உயர்த்துக!
இதற்கும் பொருளாதாரத்தை உயர்த்துவது, முதலீடு, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததே, பொரு ளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருப்பதற்கு காரணமாகும். இந்த சொற்ப ஊதியத்தைக் கொண்டே மக்கள் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து சமாளித்துக் கொண்டி ருக்கின்றனர். அவர்களால் அதிகளவு செலவு செய்ய முடியாது. பொருளா தாரத்தில் மிகக் குறைந்த கிராக்கியே உள்ளது என்பதே இதன் பொருள். அதாவது, கையில் பணம் இல்லாத தால், மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதைக் கூட குறைத்துக் கொண்டுள்ளனர். எனவே, எத்தகைய சலுகைகள் வழங்கப்பட்டாலும் தனியார் மூலதன மானது தனது உற்பத்தித் திறனை விரிவு படுத்திக் கொள்ளாது.
ஒன்றிய அரசால் அதிகமாக செலவு செய்ய முடியும். ஆனால் தற்போதைய அரசிடமிருந்து இந்த மக்களுக்கு எதுவும் வரப்போவதில்லை. இதன் விளைவு, தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலியை வழங்கி, அவர்களை கசக்கிக் பிழிந்து, வேலையில்லா தவர்களை அணிதிரட்டிக் கொள்வதன் மூலம் கார்ப்பரேட்டுகள் தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்கின்றன. ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கும் இத்தகைய நிலை தொடரும்வரை, ஊதியங்கள் மிகக் குறைவாகவும், வேலையின்மை அதிகரித்தும், லாப வரம்புகள் உயர்ந்து கொண்டும்தான் இருக்கும். விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைத்தால், அவர்கள் வாழ்க்கையை நன்றாக நடத்த உதவியாக இருக்கும். அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள இத்தகைய மக்கள் முன்னேறினால், நாட்டின் மொத்த பொருளாதாரமும் பயன்பெறும். 14 கோடி மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தால், நிச்சயம் பொருளாதாரம் வளர்ச்சி பெறும், கிராக்கியை உருவாக்கும்; உற்பத்தியை விரிவுபடுத்தவும், பிற துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும். விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து அம்சங்களையும் உள்ள டக்கிய விரிவான சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என விவ சாயத் தொழிலாளர் அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றன. இந்தியா சுதந்திரம் பெற்றதி லிருந்து, விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கோ, அவர்களுக்கு கண்ணியமான ஊதி யத்தை வழங்குவதற்கோ, பணி நிபந்த னைகள் அல்லது சமூகப் பாதுகாப்பு அளிப்பதற்கோ எந்த சட்டமும் இயற்றப் படவில்லை என்பது கவலைக்குரியது. நியூஸ் கிளிக்