states

img

ஆய்மூர் கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கியில் ஒரு கோடி ரூபாய் ஊழல்

நாகப்பட்டினம், ஜூன் 12- நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் ஆய்மூர் ஊராட்சியில் உள்ள கூட்டு றவு வங்கியில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்று உள்ளது. இதனைக் கண்டி த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை  மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமை யில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  திருக்குவளை தாலுகா ஆய்மூர் ஊராட்சி யில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் என்ற பெயரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாயத்திற்காக தங்க நகை கடன், பயிர் காப்பீட்டு வசதி, சுய  உதவிக்குழு கடன், சிறுசேமிப்பு, தொடர் வைப்பு  திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வங்கி, ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய வங்கியாக இருக்கிறது.

சிறிய அளவில் நிலம் வைத்திருப்பவர்களே அந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணி யாற்றும் வங்கியின் பொறுப்பு செயலர் இளைய ராஜா மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒரு  கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல் செய்திருப்ப தாக தெரிய வருகிறது. வங்கியில் பெற்ற நகை கடனுக்கு குறைந்த அளவில் பயனாளர்களுக்கு கடன்  தொகை வழங்கியதாக காட்டி அதிகப்படி யான தொகை எடுத்துள்ளனர். கடன் தொகையை திருப்பி கட்டுவதற்காக வந்த பயனாளிகள், இதுகுறித்து கேட்டபோது அவர் களுக்கு நகையை கொடுக்காமல் மீண்டும்  அதே கடனையே புதுப்பித்து கொடுத்திருக் கின்றனர். இதனால் சந்தேகம் அடைந்த நகை  கடன் வாங்கியவர்கள், தங்களது கடனை அடைத்து விட்டு, தங்க நகைகளை கேட்ட போது நகைகள் அங்கு இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனால், இந்த வங்கியின் சேவை களை பயன்படுத்தி வந்த 535 வாடிக்கை யாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கி மூல மாக நடைபெற்று வந்த அனைத்து பரிவர்த்தனை களிலும் ஊழல் நடைபெற்று உள்ளது. இத்தகைய  முறைகேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வங்கி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடை பெற்றது.

முன்னதாக கட்சியின் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா தலைமையில் பேரணி யாக வந்து கூட்டுறவு வங்கி வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தை நடத்தினர். ஏராளமான காவல்துறையினர் குவித்திருந்த போதும் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டு, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.  இதுகுறித்து சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கூறுகையில், “விவ சாயிகள் பெற்ற கடனுக்கான நகையை திருப்ப  வரும்போது அங்கு நகை இல்லை.  நகைகள் திருடப்பட்டு உள்ளன. இரண்டு மாதத்திற்கு வட்டி இல்லா கடன் பெற்ற வர்களுக்கு, வட்டியுடன் கூடிய கடனை வழங்கி உள்ளனர். ஒருவருடைய சிறு சேமிப்பு பணத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கணக்கில் இருக்க, அவர் வந்து கேட்கும் போது அவருடைய கணக்கில் வெறும் ஐந்தா யிரம் மட்டுமே இருந்துள்ளது. ஒரு லட்சத்து  ஐந்தாயிரம் கணக்கிலிருந்து எடுக்கப் பட்டிருக்கிறது. 

விவசாயிகள் பெற்ற நகைக்கடனுக்கு ரசீது வழங்கப்படவில்லை. மக்கள் எந்த தொகைக்கு நகையை அடகு வைத்தார்களோ, அதே தொகைக்கு நகையை மீட்டு திரும்ப வழங்கப்பட வேண்டும். கடந்தாண்டு பெற்ற பயிர் காப்பீட்டு கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அதற்கு வாய்ப்பில்லை. பயிர் காப்பீட்டு கடனுக்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டும். இதைக் காரணம் காட்டி இந்த ஆண்டு பயிர் காப்பீட்டு கடனை மறுக்கக்கூடாது. உடனடி யாக வழங்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இந்த போராட்டத்தில் கூட்டுறவுத் துறையும்,  காவல்துறையும் விரைந்து உடனடியாக நட வடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போரா ட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிளை செயலாளர் கருணாநிதி, விதொச ஒன்றிய செயலாளர் அலெக்சாண்டர், விதொச ஒன்றிய தலைவர் ஆறுமுகம், விச ஒன்றிய செயலாளர் தனபால் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர்.