புதுதில்லி, அக். 22 - இந்தியாவில் தோன்றாத எந்த மதத்திற்கும் இட ஒதுக்கீட்டின் பலனை அளிப்பது மிகப்பெரிய அநியாயம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூப்பாடு போட்டுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய செய்தித் தொடர்பாளர் விஜய் சங்கர் திவாரி உத்தரப் பிரதேச மாநிலம் கேந்திராவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள் ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: “மதம் மாறியவர்கள், சாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீடு மட்டுமல்லாமல் சிறுபான்மையினருக்கான திட்டங்களையும் பயன்படுத்துவது என, இரட்டை இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வரு கின்றனர். மதம் மாறுபவர்கள் இட ஒதுக்கீட் டின் பலனைப் பெறக்கூடாது என்று விஸ்வ ஹிந்து பரிஷத், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளது. குறிப்பாக முஸ்லிம்க ளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக அழுத்தம் கொடுக்க உள்ளது. பட்டியல் வகுப்பு மக்கள், கிறிஸ்தவர்க ளாகவும், முஸ்லிம்களாகவும் மாறியுள்ள னர். அவர்களுடைய வழிபாட்டு முறை மாறி விட்டது. மதம் மாறியவர்கள் தெய்வ சிலைகளை அவமதிப்பது போன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இன்றும் உள்ளது. இவர்கள் மதம் மாறினாலும் தங்கள் பெயரை மாற்றுவது இல்லை. துணைச் சாதியைப் பயன்படுத்துவதை நிறுத்துவது இல்லை. இத்தகைய சூழ் நிலையில், அவர்கள் தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுகிறார்கள். இது தேச விரோதம். மதம் மாறியோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு, இந்திரா மற்றும் நேரு ஆகியோர் எதிராக இருந்தனர். ஆனால் ராஜீவ், மன்மோகன், தேவகவுடா ஆகியோர் ஆதரவாக இருந்தனர். இவ்வாறு விஜய் சங்கர் திவாரி கூறி யுள்ளார்.