கொல்கத்தா, அக்-23- இரவோடு இரவாகப் போராட்டக்காரர் களை அப்புறப்படுத்தி அவர்களில் சிலரைக் கைது செய்த மேற்கு வங்கக் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக சிவில் சமூகம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மாநில ஊழியர் தேர்வாணையம் ஆகியவற்றின் ஊழ லுக்கு எதிராகவும், சரியான தேர்வர்களுக்கு வேலை தரப்பட வேண்டும் என்று கோரி மேற்கு வங்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் என்ற அறி விப்புடன் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் போராட்டம் தொடங்கிய நாள் முதல் போராட்டக்காரர் களோடு இருக்கிறார்கள். கண்டன ஊர்வலங் களுக்கும் ஏற்பாடு செய்திருந்தன. பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில் குறைந்தபட்சம் குடும்பத்தில் ஒருவராவது ஆசி ரியர் பணியில் இருக்கிறார்கள். இதனால் இந்தப் போராட்டங்களுக்கு பெரும் ஆதரவு திரண்டது. மாநில அரசு ஊழியர் தேர்வா ணையத்திற்கு எதிரான போராட்டம் 600 நாட் களைத் தொடப் போகிறது. இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த பாஜகவினர் திடீரென்று களத்தில் இறங்க முயற்சிக்கிறார்கள். திரிபுராவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மீண்டும் பணியை அளிக்க மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று போராட்டம் நடக்கிறது. அதில் எந்த நட வடிக்கையும் எடுக்காத பாஜக, மேற்குவங்கத் தில் வேடம் புனைந்து வருகிறது என்று போராட்டக்காரர்களில் ஒருவர் குறிப்பிட்டார். இதற்கு மாறாக, முதல் நாளில் இருந்து போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் செய்து வருகின்றன. இந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான வழக்குகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் பிகாஷ் பட்டாச்சார்யா தான் நீதிமன்றங்களில் வழக்காடி வருகிறார். பெரும் பேரணி வேலையில்லாதோர் மீதான அடக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி மேற்கு வங்க மாநில மக்களை சிவில் சமூகம் கேட்டுக் கொண்டது. கொல்கத்தாவில் நடந்த கண்டன ஊர்வலம் பெரும் பேரணியாக மாறும் அளவிற்கு மக்கள் திரண்டனர். கொந்தளிப்பு டன் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேற்கு வங்க இடது முன்னணியின் தலை வர் பிமன் போஸ் இதில் பங்கேற்றார். பேரணி யில் மக்களோடு, மக்களோடு கலந்து நிற்பதற் காக காரணத்தைக் கேட்டதற்கு, “இந்தப் போராட்டத்தில் நாங்கள் பெரிய அளவில் கலந்து கொண்டிருக்கிறோம். ஆனால், பேர ணிக்கு சிவில் சமூகம்தான் அழைப்புவிடுத்தது. அதனால் அவர்கள்தான் முதல் வரிசையில் இருக்க வேண்டும்” என்றார்.