states

இந்திய ரூபாய் மதிப்பு வீழவில்லை; டாலர் மதிப்பு தான் உயருகிறதாம்

வாஷிங்டன், அக்.16- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைத்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.69 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில் உலக  வங்கி மற்றும் சர்வதேச  நாணய நிதியத்தின் மாநாட் டில் பங்கேற்பதற்காக இந் தி யாவின் ஒன்றிய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா வந்துள்ளார். மாநாட்டில் பங்கேற்ற பின்,  செய்தியாளர்களிடம், டால ருக்கு நிகரான இந்திய ரூபா யின் மதிப்பு தொடர்ந்து சரி வது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “இந்திய ரூபா யின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. அமெ ரிக்க டாலரின் மதிப்பு தான்  தொடர்ந்து உயர்ந்து வரு வதைத் தான் பார்க்கிறேன்.  வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு நிக ராக அனைத்து நாட்டு பணத்தை  ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. வளர்ந்து வரும்  சந்தை நாடுகளின் பணத்து டன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடித் தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப் பும் சிறப்பாக உள்ளது” என்  றார்.  ரூபாய் மதிப்பு வீழ்ச்சி யை கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த ரிசர்வ் வங்கி சந்தையில் தலையிடுவது இல்லை. ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதில் மட் டுமே ரிசர்வ் வங்கி ஈடுபட் டுள்ளது என்றும் கூறினார். இந்திய பங்குச்சந்தை யில் இருந்து அந்நிய முதலீடு கள் வெளியேற்றம், உக் கைன் - ரஷ்யா போர், கச்சா  எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி  வட்டி விகிதத்தை உயர்த்தி யது உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால் அமெரிக்க டால ருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.