states

img

இரவு நேர மின்சாரப் பயன்பாட்டிற்கு 20% வரை அதிக கட்டணம்!

புதுதில்லி, ஜூன் 24 - சூரியஒளி அல்லாத இரவுநேரங்  களில் மின்சாரத்தைப் பயன்படுத்து வோருக்கு 20 சதவிகிதம் வரை கூடுதல்  கட்டணம் வசூலிக்கப் போவதாக ஒன் றிய பாஜக அரசு அறிவித்துள்ளது.  நாடு முழுவதும், மின்சாரக் கட்ட ணம் தற்போது ஒரே விகிதத்தில் வசூ லிக்கப்படுகிறது. ஆனால், அரசு  கொண்டுவந்துள்ள புதிய திட்டத் தின்படி, தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து இரவு நேர மின்  பயன்பாட்டிற்கான கட்டணம் 10 முதல் 20 சதவிகிதம் அதிகமாக வசூ லிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை, 2024 ஏப்ரல் 1 முதல் 10 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகபட்ச தேவை  கொண்ட வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கும், 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், ஸ்மார்ட் மீட்டர்  பொருத்தப்பட்ட உடனேயே, ஸ்மார்ட்  மீட்டர் பொருத்தப்பட்ட நுகர்வோருக் கும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள் ளது. அதேநேரம், சூரிய ஒளி கிடைக்கும்  நேரத்தில் பயன்படுத்தும் (Time of  Day - ToD) மின்சாரத்திற்கு 10 முதல் 20  சதவிகிதம் கட்டணம் குறைக்கப்படும் என கூறப்பட்டாலும், அந்தப் பகல் நேரம் என்பது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அளவிலேயே இருக்கும்  என்று கூறப்படுகிறது. எனினும், இந்த  நேர அளவு மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணைய அறிவிப்பைப் பொறுத்தது என்றும் சாமர்த்தியமாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசு  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளது. அதில், “மின்சார (நுகர்வோர் உரி மைகள்) விதிகள், 2020-இல் திருத்தம் செய்வதன் மூலம், நடைமுறையில் உள்ள மின் கட்டண அமைப்பில் இரண்டு மாற்றங்களை ஒன்றிய அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது. பகல் நேர (Time of Day - ToD) கட்டணத்தை அறி முகப்படுத்துதல், ஸ்மார்ட் மீட்டரிங் (Smart Metering) விதிகளை சீர மைத்தல் ஆகியவையே அந்த மாற்  றங்களாகும்” என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிப்பதற்கு மாறாக, மின்சாரத்திற்கு செலுத்தும் விலை, ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப மாறுபடுவதே, பகல் நேர (ToD)  கட்டண முறை” என்று விளக்கம் அளிக்  கப்பட்டு உள்ளது. “பெரும்பாலான மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் (எஸ்.இ.ஆர்.சி) ஏற்கனவே நாட்டில்  உள்ள பெரிய வணிக மற்றும்  தொழில்துறை (சி & ஐ) வகை நுகர் வோருக்கு பகல்நேர கட்டணங்களை செயல்படுத்தியுள்ளன. ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம், உள்  நாட்டு நுகர்வோர் மட்டத்தில் பகல்நேர மீட்டரிங் கட்டணக் கொள்கை ஆணை யின்படி அறிமுகப்படுத்தப்படும்” என வும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

“அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட சுமை / தேவைக்கு மேல் நுகர்வோ ரின் தேவையை அதிகரிப்பதற்கான தற்போதைய அபராதங்கள் குறைக் கப்பட்டுள்ளன. மீட்டர் விதியின் திருத்  தத்தின்படி, ஸ்மார்ட் மீட்டரை நிறுவிய பிறகு, நிறுவல் தேதிக்கு முந்தைய காலத்திற்கு ஸ்மார்ட் மீட்டரால் பதிவு  செய்யப்பட்ட அதிகபட்ச தேவையின் அடிப்படையில் நுகர்வோருக்கு எந்த அபராத கட்டணமும் விதிக்கப்படாது.  ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் மூன்று முறை அனுமதிக்கப்பட்ட சுமை யைத் தாண்டினால் மட்டுமே அதிக பட்ச தேவையை மேல்நோக்கி மாற்றி யமைக்கும் வகையில் சுமை திருத்தும் நடைமுறையும் சீரமைக்கப்பட்டு உள்ளது. மின் நுகர்வோருக்கு அதி காரம் அளிப்பதற்கும், மலிவு விலை யில் 24 மணி நேரமும் நம்பகமான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வ தற்கும், மின்சாரத் துறையில் முதலீடு  செய்வதற்கு உகந்த சூழலை பரா மரிப்பதற்கும் அரசு எடுத்துள்ள நட வடிக்கைகளின் தொடர்ச்சியே தற்போ தைய விதித் திருத்தம் ஆகும்” என்று  ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இதனிடையே, இந்த பகல் நேர மின்  கட்டண விகிதமானது, நுகர்வோருக் கும் மின் அமைப்புக்கும் கிடைத்த வெற்றி என ஒன்றிய அரசின் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், ‘மகிழ்ச்சியை’ வெளிப்படுத்தியுள்ளார்.  “பகல்நேர கட்டணம் என்பது, உச்ச நேரங்  கள், சோலார் மணிநேரங்கள் மற்றும் சாதா ரண மணி நேரங்களுக்கு என தனித்தனி கட்ட ணங்களை உள்ளடக்கியதாகும். இந்த  பகல்நேர கட்டண முறையை விழிப்புணர்வுட னும், திறம்படவும் பயன்படுத்துவதன் மூலம்,  நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும். சூரிய சக்தி மின்சாரம் மலி வானது என்பதால், சூரிய நேரத்தில் கட்ட ணம் குறைவாக இருக்கும்.  இதனால் நுகர் வோர் பயனடைகிறார்கள். சூரிய சக்தி  அல்லாத நேரங்களில் அனல் மற்றும் நீர்  மின்சாரம் மற்றும் எரிவாயு அடிப்படையி லான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் செலவுகள் சூரிய சக்தி மின்சா ரத்தை விட அதிகமாகும். இது பகல் நேர கட்ட ணத்தில் பிரதிபலிக்கும்.  எனவே, இப்போது நுகர்வோர் மின் செலவைக் குறைப்பதற்கு ஏற்ப, தங்களின் நுகர்வைத் திட்டமிடலாம். மின் செலவுகள் குறைவாக இருக்கும் சோலார் நேரங்களில் அதிக நடவடிக்கைகளைத் திட்டமிடலாம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் சிறந்த கட்டமைப்பை ஒருங்கிணைப்பதை பகல்நேர கட்டண முறை உறுதி செய்யும், இதன் மூலம் இந்தியா விரைவான எரி சக்தி மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று ஆர்.கே. சிங் குறிப்பிட்டுள்ளார்.