states

img

நீட் மசோதா: ஆளுநர் கடத்திய காலமே அதிகம் விலக்கு கேட்பது தமிழகத்தின் குரல்

சென்னை, ஜூலை 19- நீட் விலக்கு குறித்த ஒன்  றிய சுகாதாரத் துறையின்  கருத்துகள், தமிழக அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாக ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர் வில் இருந்து விலக்கு அளிக்  கும் ‘‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’’ தமிழக சட்டப்பேர வையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெற ஆளு  நருக்கு அனுப்பி வைக்கப் பட்டது.  இந்நிலையில், நீட்  விலக்கு மசோதா தொடர் பாக ஒன்றிய சுகாதாரத் துறையின் கருத்துக்கள், தமி ழக அரசுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், நீட் விலக்கு மசோதா தொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு உள் துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.

அதில், ‘‘நீட் விலக்கு  மசோதா குடியரசுத் தலைவ ரின் ஒப்புதலுக்காக ஆளுநர்  கடந்த 2.05.2022-ல் அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து  வழக்கமான நடைமுறைப் படி ஒன்றிய சுகாதாரம் மற்  றும் ஆயுஷ் அமைச்சகத் தின் கருத்துகளை பெற அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒன்றிய ஆயுஷ் அமைச்ச கங்களின் கருத்துகள் ஜூன் 21 மற்றும் 26-ஆம் தேதி தமி ழக அரசுக்கு அனுப்பி வைக்  கப்பட்டுள்ளது. இதற்கு தமி ழக அரசு அளிக்கும் பதிலை பொறுத்துதான் இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவு எடுக்க எவ்வளவு கால அவ காசம் தேவைப்படும் என் பதை கூற முடியாது’’ என்று  கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சு. வெங்கடேசன் எம்.பி., கூறு கையில், கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று சொல்லி காலம் கடத்தவும் கூடாது. ஆளுநர் கடத்திய காலமே அதிகம். நீட் தேர் வில் இருந்து விலக்கு கேட் பது தமிழகத்தின் குரல். அது  வெல்லும்! வெல்லும் வரை  நம் முயற்சிகளை தொடர் வோம் என்று கூறியுள்ளார்.