states

img

ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி 2ஆவது முறையாக பதவியேற்றார்

ஹரியானா மாநில முதல்வராக நயாப் சிங் சைனி 2ஆவது முறை யாக வியாழக்கிழமை பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அனில் விஜ், கிருஷ்ண பேடி, கிருஷ்ணலால் பன்வார், அரவிந்த் சர்மா, கிருஷ்ணா மித்தா, மஹிபால் தண்டா, மூல் சந்த் சர்மா, லக்ஷ்மண், ராவ்  நர்பீர், சுனில் சங்வான், பிபுல் கோயல், தேஜ்பால் தன்வார் ஆகிய 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த  பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். அண்மையில் நடைபெற்ற ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 3ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.