புதுதில்லி, மார்ச் 8- தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிக் கட்டணத்தை, தற்போதுள்ள கட்டணத்திலி ருந்து 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்தியாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலை களில் பயணிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட (சுமார் 45 முதல் 50 கி.மீ.) இடைவெளிகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும். ஒன்றிய அரசா னது, தனது கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ் சாலைகளையும், அவற்றில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளையும், நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் முதலாளி களுக்கு ஏலம் விட்டு, இந்த கட்டண வசூலை நிர்வகித்து வருகிறது. இவ்வாறு தனியார் நிறுவனங்கள் மூலம் வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக ஏற்கெனவே வாகன உரிமையாளர்கள், ஒட்டுநர்கள் புலம்பித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில்தான், இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூ லிக்கப்பட்டு வரும் கட்டணத்தை, ஏப்ரல் 1 முதல் மேலும், 5 சதவிகிதம் முதல் 10 சத விகிதம் வரை உயர்த்த, தேசிய நெடுஞ்சாலை கள் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பணிகளில் ஒன்றிய நெடுஞ் சாலைகள் ஆணையம் தற்போது ஈடு பட்டிப்பதாகவும், கட்டண உயர்வு குறித்த அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்தி டம் மார்ச் 25-ஆம் தேதி அளிக்கும் என்றும், அதைத்தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியா கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுதான், 10 முதல் 20 சதவிகிதம் வரை சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப் பட்டது. அதாவது, 2022-இல் ரூ. 10 முதல் ரூ. 60 வரை கட்டண உயர்வு செய்யப்பட்டது. தற்போது ஓராண்டிற்கு உள்ளேயே மீண்டும் கட்டண உயர்வு செய்யப்பட உள்ளது. இந்த முறை, இலகு ரக வாகனங்க ளுக்கு ஒரு டிரிப்பிற்கு தற்போது வசூலிக்கப் படும் கட்டணத்திலிருந்து 5 சதவிகிதம் கூடுத லாகவும், கன ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 10 சத விகிதம் கூடுதலாகவும் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்றும் தெரிகிறது. இதுதவிர, ஒன்றிய அரசானது, குறிப் பிட்ட மாநிலங்களில் இருக்கும் விரைவுச் சாலைகள் பயன்பாட்டிற்கான சுங்கக்கட்ட ணத்தையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 2.19 கட்ட ணமாக வசூலிக்கப்படும் நிலையில், எக்ஸ்பிரஸ் சாலைக் கட்டணமும் ஏப்ரல் 1 முதல் கடுமையாக உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கட்டண வசூல் பாஸ்ட்டேக் முறை யிலேயே நடப்பதால் கார்டில் கழிக்கப்படும் தொகையும், இந்த கட்டண உயர்வு மூலம் அதிக மாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2022-இல் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணமாக ரூ. 33 ஆயிரத்து 881 கோடி வசூலானது. இது முந்தைய 2021-ஆம் ஆண்டு வசூலான தொகையை விட 21 சதவிகிதம் அதிகமாகும். இதுவே 2018-19 நிதியாண்டோடு ஒப்பிடும் போது சுமார் 32 சதவிகிதம் அதிகம் வசூலா னது. ஒன்றிய அரசின் சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளி யிட்டுள்ள அறிவிப்பின்படி 2022-இல் சராசரி யாக நாளொன்றுக்கு ரூ. 139 கோடியே 32 லட்சம் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப் பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.