மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவகத் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் 115ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கேரள மாநிலம் திருச்சூரில் “இஎம்எஸ் ஸ்மிருதி” என்ற பெயரில் தேசிய கருத்தரங்கு வெள்ளியன்று துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.ராதாகிருஷ்ணன் எம்.பி., டாக்டர் தாமஸ் ஐசக், உ.வாசுகி, சிபிஐ கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.