states

img

யாராவது புண்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் ஆனால், மனதில் பட்ட உண்மையைத்தான் நான் பேசினேன்!

புதுதில்லி, டிச. 2 - 53-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜி-யில் நவம்பர் 20-ஆம் தேதி  துவங்கியது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரை யிடப்பட்டன. இதில், ஸ்பானிஷ் மொழியில் வெளியான ‘ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்’ சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. ‘நோ எண்ட்’ பட இயக்குநர் நடேர் சேவர் சிறந்த இயக்குநருக்கான ‘சில்வர் பீக்காக்’ விருதைப் பெற்றார். அதே படத்தில் நடித்த வாகித் மொபாசெரிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறி விக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டிற் கான ‘இந்தியத் திரைப்பட ஆளுமை விருது’ நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப் பட்டது.  நிறைவு விழாவில், கோவா சர்வ தேச திரைப்பட விழாவின் (IFFI) தேர்வுக்குழு தலைவரும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்கு நருமான நாடவ் லேபிட் உரையாற்றி னார். அவர், “கோவா திரைப்பட விழா வில் ‘தங்க மயில்’ விருதுக்காக போட்டியிட்ட மூன்று இந்திய படங் களில் ஒன்றான, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் இழிவான திரைப்படம்” என்று தனது விமர்சனத்தை வைத் தார். “மதிப்புமிக்க இதுபோன்ற சர்வ தேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது  ஒரு மதிப்புமிக்க திரைப்பட விழா வின் கலைப்போட்டி பிரிவுக்குப் பொருத்தமற்ற, அருவருக்கத்தக்க, பிரச்சாரத் திரைப்படம்” என்று கூறினார்.

இது விழாவில் கலந்து கொண்ட வர்களையும் பாஜக-வினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான போது, இது சிறப்பான படம் என்று, பிரதமர் நரேந்திர மோடி படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். பாஜக ஆட்சி நடக்கும் அசாம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த  படத்திற்கு வரி விலக்கு அளித்தன. அரசு ஊழியர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு விடுமுறையும் வழங்கின. பாஜக முதல்வர்கள் சிறப்புக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்தனர். அவ்வாறிருக்க, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை, சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடு வதற்குக் கூட தகுதியற்ற இழிவான  படம் என்று கோவா திரைப்பட விழா வின் தேர்வுக்குழு தலைவர் நாடவ்  லேபிட் பேசியது, சர்ச்சையை ஏற் படுத்தியது. பாஜக ஆதரவாளரும், படத்தின் இயக்குநருமான விவேக்  அக்னிஹோத்ரி, படத்தில் நடித்திருந்த பாஜக-வைச் சேர்ந்த அனுபம் கெர் உள்ளிட்டோர் நாடவ் லேபிட் மீது பாய்ந்தனர். இந்தியா வுக்கான இஸ்ரேலியத் தூதரும் நாடவ் லேபிட்டிற்கு கண்டனம் தெரி வித்தார்.

 இந்நிலையில், தன்மீதான விமர்சனங்களுக்கு நாடவ் லேபிட் பதிலளித்துள்ளார். அதில், தனது  கருத்தால் யாராவது புண்பட்டிருந் தால் மன்னிப்பு கோருவதாக தெரி வித்துள்ளார். ஆனால் அந்த திரைப்படம் (தி காஷ்மீர் பைல்ஸ்) பற்றி தான் சொன்ன கருத்து உண்மைதான் எனவும் அந்த கருத்து தன்னுடையதுதான் என்றாலும் மற்ற நடுவர்களும் அதனை அறி வார்கள் என்று கூறியுள்ளார். “காஷ்மீரில் மக்கள்பட்ட துயரங்கள் பொய் என்றோ, அதனைக் கொச்சைப்படுத்தும் வித மாகவோ நான் கருத்து தெரிவிக்க வில்லை” எனவும் “அந்த படத்தில்  கலைத்தன்மை குறித்து பேசும்போது அது பிரச்சாரப் படம்” என தெரி வித்ததாகவும் கூறியிருக்கும் நாடவ் லேபிட், “சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, காஷ்மீர் பைல்ஸ் விவகாரத்தில் எனக்கு எதிராக இந்த மலிவான பிரச்சாரத்தை மேற் கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள் ளார். மேலும் “தன்னுடைய நாட்டிலும்  (இஸ்ரேல்) தற்போது இதுபோன்ற  நிலை (மலிவான வெறுப்புப் பிரச்சா ரம்) ஏற்படும் என அஞ்சுகிறேன்” என்று தெரிவித்திருக்கும் நாடவ் லேபிட், “அப்போது இதுபோன்ற ஒரு  திரைப்பட விழாவிற்கு தன் நாட்டிற்கு  (இஸ்ரேலுக்கு) வரும் ஒரு வெளி நாட்டு நடுவர், தற்போது தான் (இந்தி யாவில்) பேசியதைப் போல் உண்மையை பேச வேண்டும்” என  எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள் ளார்.