states

மதச்சார்பின்மைக்கான போராட்டத்தில் முன்னின்றவர் முலாயம் சிங் யாதவ்

புதுதில்லி, அக். 10 - உ.பி. மாநில முன்னாள் முதல்வர் முலா யம் சிங் யாதவ் மறைவுக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு இரங்கல் தெரிவித்து வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலை வரும், உ.பி. மாநிலத்தில் மூன்று முறை  முதல்வராகவும், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய முலா யம் சிங் யாதவ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. சமூக நீதிக்கான போராட்டத்தில் முக்கியமானத் தலைவராக விளங்கியவர் முலாயம் சிங் யாதவ். அரசியல் கட்சித் தலை வர் என்ற முறையிலும், முதல்வர் என்ற முறையிலும் மதவெறி சக்திகளை எதிர்த் தும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் நடைபெற்ற போராட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அவர் தனது மகத்தான பங்களிப்பினை செய்துள்ளார். நெருக்கடியான தருணங்களில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடும், இடதுசாரி கட்சிகளோடும் நெருக்கமாக பணியாற்றியவர் அவர். அகிலேஷ் யாதவ்  உள்ளிட்ட முலாயம் சிங் யாதவ் குடும்பத்தினருக்கும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.