புதுதில்லி, ஜன. 18 - ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் என்று அழைக்கப்பட்ட மீர் பர்கத் அலிகான் உடல் ஹைதராபாத்தில் அரசு மரியாதையுடன் புதனன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மீர் பர்கத் அலி கான் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் வசித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு உயிரி ழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 89. கடந்த 1933-ஆம் ஆண்டு அக்டோ பர் 6-ஆம் தேதி அப்போதைய ஹைத ராபாத் நிஜாம் ஆசம் ஜா - துர்ரே ஷெ வார் (துருக்கி நாட்டின் கடைசி சுல்தான் ஒட்டமான் பேரரசைச் சேர்ந்த அப்துல் மஜித்தின் மகள்தான் துர்ரே ஷெவார்) தம்பதிக்கு மகனாக பிறந்தவர் மீர் பர்கத் அலி கான். ஹைதராபாத்தின் எட்டாவது மற்றும் கடைசி நிஜாம் என அழைக்கப்பட்ட இவர், 1971-ஆம் ஆண்டில் மன்னர் குடும்ப பதவிகள் மற்றும் மானியங்களை இந்தியா ரத்து செய்யும் வரை அதிகாரப்பூர்வமாக ஹைதராபாத் இளவரசர் என்றே அழைக்கப்பட்டார். மீர் பர்கத் அலிகான் பிறந்த நேரத்தில், அவரது தாத்தா மீர் உஸ்மான் அலிதான் உலகின் பெரும்பணக் காரராக இருந்துள்ளார். தற்போதைய மதிப்பில் மீர் உஸ்மான் அலி கானின் அன்றைய சொத்து மதிப்பு 236 பில்லி யன் டாலர் (19 லட்சம் கோடி ரூபாய்) ஆகும். சில்வர் கோஸ்ட் த்ரோன் கார் உட்பட பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தார்.
ரூ. 1,000 கோடி மதிப்புள்ள வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார் என்றும் கூறப்படுவதுண்டு. 40 கிராம் எடை கொண்ட இந்த வைரத்தை 1995-ஆம் ஆண்டு நிஜாம் அறக்கட்டளையிடம் இருந்து 13 மில்லியனுக்கு இந்திய அரசு வாங்கியது. இப்போது இந்த வைரம் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பாதுகாப்புப் பெட்ட கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், மீர் உஸ்மான் அலி கானின் பேரனும், துருக்கி இஸ்தான்புல்லில் வசித்து வந்த ஹைதராபாத்தின் கடைசி நிஜாமுமான மீர் பர்கத் அலி கான் சனிக்கிழமை யன்று காலமானார். இறந்த பிறகு, தனது உடலைத் தாய்நாட்டில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பது மீர் பர்கத் அலி கானின் கடைசி ஆசை என்பதால், அவரது உடல் செவ்வாயன்று இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. முதலில் ஹைதராபாத்திலுள்ள சௌமஹல்லா அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மீர் பர்கத் அலி கானின் உடல், அங்கு சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, ஆசப் ஜாஹி என்ற இடத்தில் உள்ள கல்லறையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஏழைகளுக்குக் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறை களில் சமூக சேவை செய்த மீர் பர்கத் அலி கானின் உடல் அரசு மரியா தையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார்.