states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

“மோடியின் பொருளாதார மறுமலர்ச்சி பிரச்சாரத்துக் கிடையே உள்நாட்டில் பொருட்களுக்கான கிராக்கி வெகுவாக குறைந்து வருகிறது. பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழந்து, உயிர்வாழ்வதற்காகவே செலவு செய்கிறார்கள். ஆனால் மோடியின் கூட்டாளிகள் நாட்டின் சொத்துக்களைச் சூறையாடி லாபத்தால் கொழுத்த நிலையில் உள்ளனர்”

தனியார் முதலீட்டையும் ஈர்க்க முடியாத மோடி அரசு

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்று மதி,  இறக்குமதி என பல்வேறு பிரிவுகளில் தனியார் துறை பங்கு கணிசமானதாக உள்ளது. நாட்டின் தனியார் மொத்த மூலதன உருவாக்கம் கடந்த 14-வது நிதியாண்டில் (2014 - 2015) 25% ஆகவும், 15-வது நிதியாண்டில் (2015-2016) 26% இருந்த நிலையில், மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின்  தனியார் முதலீடு வெகுவாக குறைந்துள்ளது. முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் பெரும் மூலதனங்களை ஈர்ப்பதாக கூறி வரி குறைப்புகள் மற்றும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்ட பொழுதிலும், இந்தியாவின் தனியார் முதலீடு தலைகீழாக இறங்கி, 2022-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் முதலீடு 22% ஆக குறைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டிலிருந்து (நிதியாண்டு) ஒன்றிய அரசாங்கம்  மூலதனச் செலவினத்தை மூன்று மடங்கு அதிகரித்தாலும், தனி யார் துறையினர் முதலீடு செய்வதில் ஆர்வ மில்லாமல் மந்தமாகவே உள்ளனர். 

வலுவான நிலையில் சீனா

தனியார் துறையின் இந்த மந்தமான முதலீட்டுக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளதாக உலக வங்கி பல்வேறு தகவல்களை அடுக்கியுள்ளது. குறிப்பாக, பொருள் உற்பத்தித் துறையில் சீனா வலுவாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது மிகவும் மலிவாக உள்ளது. எனவே இந்தியாவில் கணிசமாக முதலீடு செய்ய வேண்டிய தேவை, தனியார் முதலாளிகளுக்கு ஏற்படவில்லை.

குறையும் நுகர்வு

அடுத்து, இந்திய கிராமப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே குறைந்து வரும் நுகர்வும் முக்கியக் காரணமாக உள்ளது. பொருளுக்கான கிராக்கியைப் பொறுத்தே அதன் உற்பத்திக்கான முதலீடுகள் அமையும். கடந்த 5 ஆண்டு காலமாக கிராமப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயான நுகர்வு இறங்கு முகமாக பயணித்து வரும் நிலையில், கொரோனா தொற்று  பரவல், நிலைமையை மேலும் மோசமடைய வைத்தது. தற்போது  நுகர்வு ஓரளவுக்கு மீண்டு வருவதாக கூறப்பட்டாலும், அது பணக்கார  மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே தான் கணிசமாக உள்ளது. இதுதவிர ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் மற்றும் இதர உலக அரசியல் பதற்றங்கள் பணவீக்க அழுத்த நிலையை மோசமாக்கியுள்ளன. நிலையான மூலதன உருவாக்கம் மூலம் அளவிடப்படும் முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37% இலிருந்து 31% ஆக குறைந்துள்ளது, அதே நேரத்தில் பொருட்களின் ஏற்றுமதி 2011-12 முதல் 2019-20 வரை சுமார் 300 பில்லியன் டாலர்களாக இருந்தது; கொரோனாவால் ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சி, பொருட்களின் தேவை அதிகரிப்பு, அதன் காரணமாக மேலும் உயர்ந்த பணவீக்கம் போன்றவற்றால் ஏற்றுமதி மோசமான நிலையை அடைந்தது. தற்போது நிலைமை மாறியது போல் காட்டப்பட்டாலும் ஏற்றுமதி தேக்க நிலையில்தான் உள்ளது. பலவீனமான ஏற்றுமதி மற்றும் மக்கள் நுகர்வு குறைவது, தனியார் முதலீட்டின் வேகத்தைக் குறைக்கும் என பொருளாதார நிபுணரும் இந்தோனோமிக்ஸ் கன்சல்டிங் நிறுவனருமான ரித்தேஷ் சிங் கூறுகிறார்.

கடன் கொடுக்க அஞ்சும் வங்கிகள்

முன்னரெல்லாம் முதலீட்டு விகிதங்களின் உயர்வு நிலைகளுக்கு ஏற்ப வங்கிகள் நிதியளித்தன. ஆனால் தற்போது வங்கிகள் கடன் அளிப்பதில் பல்வேறு தனி விதிகளை வைத்துள்ளன. செயல்படா சொத்துக்கள் (என்பிஏ) எனப்படும் வராக்கடன்கள் அதிகரித்துள்ள நிலையில், வங்கிக் கடன் இல்லாமல் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யவும், முதலீட்டு திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் அதிகம் யோசிக்கின்றனர். 

சீத்தாராம் யெச்சூரி  ரீ டுவிட் செய்த ‘Private investment slowdown in india’ என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் (19.3.23) செய்திக் கட்டுரையின் தமிழ் சுருக்கம் : எம்.சதீஸ்குமார்.