புதுதில்லி, மார்ச் 28 - 2022-23 நிதியாண்டிற்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 0.05 சதவிகிதம் உயர்த்த மத்திய அறங்காவலர் குழு (CBT) அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இருபது தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களில் மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎப் பிடித்தம் செய்யப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவிகிதம் ஊழியர்களின் பங்களிப்பாகவும் 12 சத விகிதம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்களிப்பாகவும் வாரியத்தில் செலுத்தப்பட வேண்டும். ஒட்டு மொத்த 24 சதவிகித பங்களிப்பில், ஒரு பகுதி ஓய்வூதியத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். அந்த வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியமானது (EPFO), நாட்டின் மிகப் பெரிய ஓய்வூதிய நிதி மற்றும் சுமார் ரூ. 16 லட்சம் கோடி மதிப்புடைய இரண்டா வது பெரிய வங்கி சாரா நிதி நிறுவன மாக உள்ளது. வாரியத்தில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான உறுப்பினர் கள் உள்ளனர்.
இந்த திட்டத்தில் இணைந்த தொழிலாளர்களுக்கு, ஏனைய சேமிப்புத் திட்டங்களைக் காட்டிலும் அதிகபட்ச வட்டி வழங்கப்பட்டு வந்தது. 2001 முதல் 2005 வரை யிலான ஆண்டுகளில் 9.50 சதவிகிதம் என்ற அளவிற்கு வட்டி வழங்கப் பட்டது. இது 2005-2010 வரையிலான காலத்தில் 8.50 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதன்பின்னர் 2010-11 நிதியாண்டில் 9.50 சதவிகித மாக உயர்த்தப்பட்டு, 2011-12 நிதி யாண்டில் 8.25 சதவிகிதமாக- ஒரேயடி யாக 1.25 சதவிகிதம் குறைக்கப் பட்டது. 2012-13 நிதியாண்டில் 8.50 சத விகிதம், 2013-15 வரை 8.75 சத விகிதம், 2015-16 நிதியாண்டில் 8.80 சதவிகிதம், 2016-17 நிதியாண்டில் 8.65 சதவிகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவிகிதம், 2018-19 நிதியாண்டில் 8.65 சதவிகிதம், 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்கு 8.50 சதவிகிதம் என்று வட்டி வழங்கப்பட்டது.
இது 2021-22 நிதியாண்டில் 8.10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. முன்னதாக 1977-78 நிதியாண்டில் 8 சத விகிதம் என்ற அளவிற்கு மிகக் குறைந்த வட்டி விகிதம் நிர்ண யிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2021-22 நிதியாண்டில்தான் 8.10 என்ற அளவிற்கு வட்டி குறைக்கப்பட்டது. இந்நிலையில், தில்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இ.பி.எப். அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்ட முடிவில், தொழி லாளர் வருங்கால வைப்பு நிதித் தொகைக்கு 2022-2023 நிதியாண்டிற்கு 8.15 சதவிகிதம் வட்டி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்தாண்டை விட 0.05 சதவிகிதம் வட்டியை உயர்த்த ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஒப்புதல் அளித்தபின், அடுத்த சில வாரங்களில் இந்த வட்டித்தொகை தொழிலாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.