புதுதில்லி, மே 11- 2019 முதல் 2021 வரை நாட்டில் உள்ள அரை லட்சத்துக்கும் அதிக மான அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட தாக ஒன்றிய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் பதினைந்தாயிரம் அதிகரித்துள்ளது. ஆனால், கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் அதிகரித்து, தனியார் பள்ளிகள் குறைந்துள்ளன. தேசிய அளவில், உதவி பெறும் பள்ளிகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. மத்தியப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்விக்கான ஐக்கிய மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE) பிளஸ் -2021 அறிக்கையில் இந்த புள்ளி விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. 2018இல் 10,83,678 ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2021இல் 10,32,049 ஆகக் குறைந்துள்ளது. இதன்படி 51,629 பள்ளிகள் மூடப்பட்டன. அதே சமயம், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 3,25,760இல் இருந்து 3,40,753 ஆக அதிகரித்துள்ளன.
அதிகரிப்பு- 14,993. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 84,614ல் இருந்து 84,295 ஆக குறைந்துள்ளன. இதன்படி 319 பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால், கேரளாவில் 2016-17இல் 4783 ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2020-21இல் 5020 ஆக அதிகரித்துள்ளது. குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக மூடப்பட இருந்த 237 அரசுப் பள்ளிகளை மாநில அரசு மீண்டும் செயல்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 3533 லிருந்து 3241 ஆக குறைந்துள்ளன. இதன்படி 292 தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. மேற்குவங்கத்திலும் பீகாரிலும் பள்ளிகள் அதிகரித்துள் ளன.
உ.பி., மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் அரசுப்பள்ளிகள் மூடப்பட்டன. உ.பி.யில் 26,074, மத்திய பிரதேசத்தில் 22,904. ஒடிசாவில் 5,227 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டன. இந்த மூன்று மாநிலங் களிலும் மூடப்பட்டதில் பெரும்பா லானவை தொடக்கப் பள்ளிகளாகும். அரசுப் பள்ளிகளை மூடுவது என்பது கல்வித்துறையில் தனியார் மயத்தை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் கொள்கையின் ஒரு பகுதியாகும். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அந்த பள்ளியை அருகிலுள்ள பள்ளியுடன் இணைக்க 2016இல், ஒன்றிய அரசின் செயலர் குழு பரிந்துரைத்தது. இதற்கு நிதி ஆயோக் அமைப்பும் ஆதரவு அளித்துள்ளது. இதனால், பல மாநிலங்கள் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தாமல் மூடும் அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றன.