states

img

3 பாதுகாப்புப்படை வீரர்கள் மரணம்

அனந்தநாக்,செப்.14- காஷ்மீரின் ஆனந்த்நாக் - ரஜோரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல் மன்பிரீத் சிங்,  மேஜர் ஆஷிஷ் மற்றும் பாது காப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காஷ்மீர்  காவல்துறை துணை காவல் கண்காணிப்பா ளர் ஹுமாயுன் பட் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுடன் லாப்ரடோர் என்ற ஆறு வயது பெண் மோப்ப நாயும் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது. நாட்டிற்காக வீரமர ணம் அடைந்த வீரர்கள் மற்றும் மோப்ப நாய்க்கு பல்வேறு தரப்பினர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், விஷயம் அறிந்தும் பிரதமர் மோடி இதைப்பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை, இரங்க லும் தெரிவிக்கவில்லை. நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு ரூ.50,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வியாழ னன்று சென்றுவிட்டார். பாதுகாப்புப்படை வீரர்களின் மரணத்திற்கு சாதாரண இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாத பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.