‘கொரோனா அச்சம் தேவையில்லை’
“சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. எனினும் நாம் (இந்தியர்கள்) அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், நாம் சிறப்பான முறை யில் தடுப்பூசி பாதுகாப்பை பெற்றிருக்கிறோம். அதேநேரத்தில், ஒன்றிய அரசும் சுகாதாரத் துறையும் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்து அளித்த சீரம் நிறு வனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா நம்பிக்கை அளித்துள்ளார்.
நாட்டில் செப்டிக் டேங்க் பணியின்போது 352 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கியதில் 352 பேர் வரை உயிரி ழந்துள்ளனர். இதில் உத்தரப் பிரதேசம் (57) முதல் இடத்திலும், தமிழ்நாடு (46) 2-ஆவது இடத்திலும், புதுதில்லி (42) 3-ஆவது இடத்திலும் உள்ளன. 4-ஆவது இடத்தில் ஹரியானா (38) உள்ளது என்று ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத் தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். மேலும், நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் யாரும் ஈடுபடுத்தப்பட்ட தாக தகவல் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக போட்ட பிச்சை
“தமிழகத்தில் 4 தொகுதிகளை வென்ற பாஜக தன்னை எதிர்க்கட்சியாக நினைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அதிமுக போட்ட பிச்சையாலேயே அந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. நாள்தோறும் நாளிதழ்கள், மீடியாக்களில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காக பாஜக தலைவர் அண்ணா மலை எதை எதையோ பேசி வருகிறார்” என்று திருத்தணியில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கோ.ஹரி பேசியுள்ளார்.
‘மாபா’ பாண்டியராஜன் கண்டனம்!
“திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப்போகிறது” என்று அதி முக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியிருந்த நிலையில், “யாரோ மூன்றாம் கட்ட தலைவர்கள் பாஜக - திமுக கூட்டணி அமையப்போகிறது என்று சொன்னால் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்று பாஜக தலைவர் கே. அண்ணாமலை சாடியிருந்தார். இந்நிலையில், “சி.வி. சண்முகத்தை மூன்றாம் கட்ட தலைவர் என்று அண்ணாமலை பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வளரக்கூடிய அரசியல் தலைவர், அவர் இப்படி பேசக்கூடாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ‘மாபா’ பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.
காப்புக் காடுகளுக்கு அருகிலுள்ள குவாரிகள் மூடப்படும்: அமைச்சர்
சென்னை,டிச.22- காப்புக் காடுகளுக்கு அருகில் செயல்படும் குவாரிகள் அனைத்தும் மூடப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், “தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால பாதிப்பை தடுப்பதுதான் அரசின் நோக்கம். இதை செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.73 கோடிக்கு திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது”என்றார். தமிழகத்தில் 16 மாவட்டங்கள் கடற்கரைக்கு அருகில் உள்ளன. இந்த மாவட்டங்களில் கடல் அரிப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க நடவடிக்கை கள் எடுக்கப்படும். தமிழகத்தில் வனப்பரப்பை 23.8 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடாக உயர்த்த பசுமைத் தமிழகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். காப்புக் காடுகள், பறவைகள் சரணா லயம், மலைப்பகுதிகளின் அருகில் குவாரிகள் அமைக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. இதற்கு முன்பு யாரும் குவாரி அமைத்திருந்தால் அவை முழு வதுமாக மூடப்படும் என்றும் தெரிவித்தார்.
விமான கட்டணம் பலமடங்கு உயர்வு
சென்னை,டிச.22- கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரை யாண்டு விடுமுறையையொட்டி சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை கால விடுமுறையால், சொந்த ஊர்களுக்கு அதிகம் செல்லக்கூடும் நிலையில், சென்னையி லிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது. மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு 6ஆக இருந்த விமான சேவை தற்போது 8 ஆக வும், கோவைக்கு 16ஆகவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5300 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,500 வரை வசூல் செய்யப் படுகிறது. மதுரைக்கு வழக்கமாக ரூ.3,600 என கட்டணம் உள்ள நிலை யில் தற்போது ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோவைக்கு ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.19,500 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையி லும், டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
செம்பரம்பாக்கம்: உபரிநீர் திறப்பு நிறுத்தம்
சென்னை,டிச.22- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் ‘மாண்டஸ்’ புயலால் பெய்த தொடர்மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததை தொடர்ந்து ஏரியிலிருந்து 3 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. தற்போது மழை குறைந்ததால் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மழை முழுவதும் ஓய்ந்து உள்ளதால் செம்பரம் பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. இதையடுத்து ஏரியி லிருந்து திறக்கப்படும் உபரி நீர் முற்றி லும் நிறுத்தப்பட்டுள்ளது.
‘கியூட்’ நுழைவுத்தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
சென்னை,டிச.22- கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை தொடங்கி வைத்தார். 225 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஆயிரக்கணக்கான புற மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமடைந் துள்ளனர். இந்நிலையில் கீழ்பாக்கம் அரசுமனநல மருத்துவமனையில் ரூ.2.36கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று (டிச.22) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ரூ.22.84 கோடியி லான 75 புதிய அவசர கால வாகனங்கள், மாணவர்க ளுக்கு ‘மனம்’ திட்டம், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மனநல நல் ஆதரவு மன்றங்களையும் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இடைநிலை பராமரிப்பு மையத்தை பார்வையிட்ட முதலமைச்சர், புறநோயாளி கள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி களை சந்தித்தும் நலம் விசாரித்தார். இதற்கு முன்பு 1970 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதியும், 1994 இல் முதல்வராக இருந்த ெஜயலலிதாவும் இங்கு ஆய்வு மேற்கொண் டுள்ளனர்.
பாஜக அமைச்சரின் பேச்சால் இந்துத்துவா வட்டாரங்கள் சலசலப்பு ‘விவாகரத்து பெற்ற பெண்ணைப் போல சீதா பிராட்டி வாழ்க்கை நடத்தினார்!’
சிம்லா, டிச. 22 - இன்றைய காலத்தில் விவா கரத்து பெற்ற பெண்கள் எந்த வாழ்க்கையை வாழ்கிறார்களோ, அவர்களைப் போலத்தான் சீதா பிராட்டி வாழ்க்கை நடத்தியதாக ம.பி. மாநில பாஜக அமைச்சர் மோகன் யாதவ் பேசியிருப்பது, இந்துத்துவா கூட்டத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமை யிலான ம.பி. மாநில பாஜக அரசில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் மோகன் யாதவ். இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று உஜ்ஜைனி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போதுதான், ராமரின் மனைவி யான சீதையை, விவாகரத்தான பெண்களின் வாழ்க்கை நிலை யோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். “கடுமையான இன்னல்களைச் சந்தித்த போதும், சீதை தனது கணவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தனது கஷ்டங் களை மறந்து கடவுள் ராமரின் வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்தார். தற்போதைய காலத்தில், சீதா பிராட்டியின் இந்த வாழ்க்கை, விவாகரத்து ஆனதற்கு பிற கான பெண்களின் வாழ்க்கைக்கு ஒப்பானது” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பேச்சுதான் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. பாஜக அமைச்சர் ஒருவரே சீதா தேவியையும், ராமரையும் அவமதிக்கும் வகையில் பேசி யிருப்பது இந்துத்துவா அமைப்பு களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனிடையே ராமர், சீதா தேவி பற்றி மற்றவர்கள் பேசும்போது தாவிக்குதிக்கும் பஜ்ரங் தள் கூட்டத்தினர், தற்போது மோகன் யாதவ் பேச்சுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.. எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள்..? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பி யுள்ளார். மோகன் யாதவை பதவியிலிருந்து நீக்கச் சொல்லி வலியுறுத்துவீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மாதம் தில்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் ஆசிரியர் விகாஸ் திவ்யகீர்த்தி என்பவர், சமஸ்கிருத எழுத்தாளரின் கருத்தை மேற்கோள் காட்டி, சீதையை, ‘நாய் அசுத்தப்படுத்திய நெய்’ என்று குறிப்பிட்டதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
பள்ளி பாட நூல்களில் பகவத்கீதை, வேதங்களை சேர்க்க வேண்டுமாம்!
புதுதில்லி, டிச. 22 - பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள டக்கம் மற்றும் வடிவமைப்பில் சீர்திருத்தங் கள் என்ற தலைப்பிலான நாடாளு மன்ற நிலைக்குழு மாநிலங்களவை யில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பாஜக எம்.பி. விவேக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்துள்ள அந்த பரிந்துரையில்தான், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் (என்சிஇஆர்டி) பாடப்புத்தகங்களில் வேதங்கள், பகவத் கீதை மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாற்றை சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இருக்கும் முக்கிய பெண் ஆளுமைகள் மற்றும் அவர்களுடைய பங்களிப்பும் சேர்க்கப் பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை இதனை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் உக்ரைன்
கீவ், டிச.22- ரஷ்யாவுடனான மோதலைக் காரணம் காட்டி, உக்ரைனில் இருக்கும் பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்களை அழி க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். இட்லரின் தலைமையிலான அச்சு நாடுகள் கூட்டணியைத் தகர்க்கும் பணி யில் அன்றைய ஒன்றுபட்ட சோவியத் யூனி யனின் பங்கு மகத்தானதாகும். அதை நினைவுகூரும் வகையில் அன்றைய சோவியத் யூனியனின் பல பகுதிகளி லும் நினைவுச்சின்னங்கள் அமைக்கப் பட்டன. பல்வேறு சாலைகள் மற்றும் தெருக் களுக்கு தலைவர்கள், எழுத்தாளர்கள் உள் ளிட்டோரின் பெயர்கள் சூட்டப்பட்டன. தற்போது வெவ்வேறு நாடுகளாக இருக்கும் ரஷ்யாவும், உக்ரைனும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைனில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்கள் நீக்கப்பட்டு வரு கின்றன. ரஷ்யாவின் செல்வாக்கை நிலை நாட்டும் வகையில் இவை உள்ளன என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. கம்யூனிச எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டு செய்தவற்றை தற்போது ரஷ்ய மயமாக்கலில் இருந்து விடுபடுவது என்று சொல்லிக் கொள்கிறார்கள். புரட்சியாளர் விளாடிமீர் லெனினின் பெயர்களை ஏற்கனவே நூற்றுக்கணக் கான சாலைகள் மற்றும் தெருக்களில் இருந்து அகற்றி விட்டார்கள். இந்த மாதத்தில் மட்டும் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள 30 தெருக்களில் உள்ள பெயர்கள் மாற்றப்படுவதாக அந்நகரின் மேயர் விடாலி கிளிட்ஸ்கோவ் அறிவித்து ள்ளார். இந்த நினைவுச் சின்னங்கள் பாசிச த்திற்கு எதிரான உக்ரைனின் பங்களிப்பை யும் நினைவூட்டுபவை என்று வரலாற்றா ய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.