கோயம்புத்தூர், ஜூன் 5- திருமணமான 12 நாளில் ஈஷா யோகா மையத்தை சுற்றிப் பார்க்க வந்த மதுரையைச் சேர்ந்த இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை அண்ணா நகர் அருகே உள்ள பெரியார் தெருவை சேர்ந்தவர் மனோஜ் (25). இவர் கடந்த 5 ஆண்டு களாக தாரணிபிரியா (25) என்பவரை காதலித்து வந்தார். இதன்பின் இரு வீட்டார் சம்மதத்துடன் மே 24 அன்று திரு மணம் செய்து கொண்டார். தாரணிபிரியா தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார். இந்நிலையில், காதல் தம்பதியின ரான மனோஜ்-தாரணிபிரியா ஆகிய இருவரும், தேனிலவிற்காக கோவைக்கு வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தபின், சனிக்கிழமையன்று இரவு ஈஷா யோகா மையத்திற்கு சென்றனர். அப்போது, ஈஷாவில் திவ்யதரி சனம் லேசர் டிஸ்பிளே நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த போது, திடீ ரென தாரணி பிரியா காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த மனோஜ், ஈஷா மையம் முழுவதும் தேடி பார்த்தார். அவரை எங்கும் காணவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது இணைப்பு கிடைக்க வில்லை. மனைவி காணாமல் போன தையடுத்து மனோஜ், ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, தாரணிபிரியா கையில் பையுடன், ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்த விவரம் தெரி யவில்லை. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 12 நாளில் கோவை யைச் சுற்றிப் பார்க்க வந்த இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தொட ர்ந்து ஈஷா யோகா மையத்தில் நடந்து வரும் மர்மமான சம்பவங்களால், அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.