புதுதில்லி, ஏப்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2021 தகவல் தொழில்நுட்ப விதி களில் சில திருத்தங்கள் மேற்கொ ள்ளப்பட்டு, பத்திரிகை தகவல் பணியகத்திற்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒன்றிய அரசாங்கம் குறித்து, முகநூல், டிவிட்டர், கூகுள் போன்ற சமூக ஊடக மேடைகள் வெளியிடும் “பொய்யான அல்லது தவறான அல்லது திசைதிருப்பும் விதித்தில் தகவல்கள்” (“fake, or false, or misleading” information) வெளி யிடப்படுகிறதா என்பதை ஆராய்ந்து, அதன்மீது முடி வெடுத்திட இவ்வதிகாரங்கள் பத்திரிகை தகவல் பணியகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் பத்திரிகை தகவல் பணியகம் அளித்திடும் முடிவு களை ஏற்க மறுத்தால், அவற்றின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் விதத்தில் அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்களை அவை இழந்திடும். இவ்வாறு பத்திரிகை தகவல் பணியகத்திற்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பது அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்து வோரைப் பாதித்திடும் விதத்தில் தணிக்கை செய்யப்படுவதற்கு சமமாகும். இது முற்றிலும் ஜன நாயக விரோதமானதும், ஏற்க முடியாததுமாகும். இவ்வாறு தகவல் தொழில்நுட்ப விதிகளில் (IT Rules) மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் உடனடியாக வில க்கிக்கொள்ளப்பட வேண்டும்.