states

கல்லூரி மாணவிகள் இரவில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் மம்தா பானர்ஜி சர்ச்சை பேச்சு

கல்லூரி மாணவிகள் இரவில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் மம்தா பானர்ஜி சர்ச்சை பேச்சு

மேற்கு வங்க மாநிலம் சோபா பூரில் உள்ள தனியார் மருத்து வக் கல்லூரியில் பீகார் மாநி லத்தைச் சேர்ந்த இளம்பெண் (வயது 23)  இளங்கலை மருத்துவ படிப்பு பயின்று வருகிறார். வெள்ளிக்கிழமை அன்று இரவு நண்பருடன் வெளியே சென்ற பொழுது 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா  விமான நிலையத்தில் மேற்கு வங்க முத லமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியா ளர்களிடம் பேசுகையில்,”மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை பொறுத் துக்கொள்ள முடியாது. தற்போது வரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி தனியார் மருத்துவக் கல்லூரி யில் பயின்று வருகிறார். இதற்கு யார்  பொறுப்பேற்க வேண்டும்? இரவு 12.30 மணிக்கு அவர் எப்படி வெளியே சென் றார்? பெண்கள் இரவில் வெளியே (கல்லூரி விடுதியில் இருந்து) செல்ல அனுமதிக்கக் கூடாது. அவர்கள் தங் களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். விடுதியில் தங்கி படித்துவரும், குறிப் பாக மேற்கு வங்கத்திற்கு வெளியே இருந்து வரும் மாணவிகள் விதிகளை பின்பற்ற வேண்டும். நள்ளிரவில் வெளியே செல்வதை அவர்கள் தவிர்க்க  வேண்டும். எங்குச் சென்று வரவும் அவர்  களுக்கு உரிமை உள்ளது என்றாலும், அவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நபரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் காவல்துறைக்கு சில தளவாட கட்டுப்பாடுகள் உள்ளன.  ஒவ்வொரு வீட்டை விட்டு, விடுதியை  விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு வருடனும் காவல் துறையினர் வர முடி யாது. கல்லூரியிலும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளிலும் மாணவிகளின் பாது காப்பை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய  வேண்டியது கட்டாயம்” என சர்ச் சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.