திருவனந்தபுரம், பிப்.17- மலையாள திரை யுலகில் பிரபல நடிகரான கோட்ட யம் பிரதீப் வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 61. அதிகாலை 4.30 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. கோட்டயம் பிரதீப் தமிழில் ‘ராஜாராணி’, ‘விண்ணைத் தாண்டிவரு வாயா’, நடிகர்விஜய்யின் ‘தெறி’ உள்ளிட்ட படங் களில் நடித்திருக்கிறார்.மலையாளத் திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடித்துவந்த கோட்ட யம் பிரதீப், மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர் களுடன் இணைந்து நடித்துள் ளார். கடந்த 2001-ஆம்ஆண்டு தனது 40வது வயதில்தான் கோட்டயம் பிரதீப் தனது நடிப்பு பயணத்தை தொட ங்கினார். ‘ஒருவடக்கன் செல்ஃபி’, ‘அமர்அக்பர ஆண்டனி’ உள்ளிட்ட 70க்கு மேற்பட்ட படங்களில் நடித் திருக்கிறார். இவருக்கு மாயா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.