states

தொழிலாளர்களிடம் மண்டியிட்டது மகாராஷ்டிர அரசு

புதுதில்லி, ஜன. 5- தனியார்மயமாக்கல் என்ற போர்வை யில் மகாராஷ்டிராவில் மின்சாரம் வழங்கும் துறையை அதானி குழுமத்தி டம் ஒப்படைக்கும் அரசின் முடிவு, ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடும் போராட்டத்தைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுத் துறை மின்சார ஊழியர்கள், ஒப்பந்தத்  தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர் கள் துவக்கிய 72 மணி நேர வேலை நிறுத்தத்தினால் மகாராஷ்டிர அரசு சரணடைந்தது. எஸ்மா மிரட்டல் விடுத்தாலும், வேலைநிறுத்தப் படை யை அரசால் அடக்க முடியவில்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய சில மணி நேரங்களில், பேச்சுவார்த்தைக்கு அடிபணிந்த துணை முதல்வர் தேவேந் திர பட்னாவிஸ், தனியார்மயமாக்கும் முயற்சியில் இருந்து அரசு விலகுவதாக அறிவித்தார். இதன் மூலம் மும்பையின் சில பகுதி களில் மின்சார விநியோகத்தை அதானி  குழுமத்திடம் ஒப்படைக்கும் நட வடிக்கை கைவிடப்பட்டது. தனியார் மயமாக்கல் நடவடிக்கை யை கைவிட வேண்டும், புதிய பணி நிய மனத்துக்கு தயாராக வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி மின்வாரியத்தைச் சேர்ந்த சிஐடியு உள்ளிட்ட 31 அமைப்பு கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு  முதல் 72 மணி நேர வேலைநிறுத்தத்தை தொடங்கின. புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடந்த பேச்சுவார்த்தை யில் துணை முதல்வர் பட்னாவிஸ்,  கோரிக்கைகளை ஏற்பதாக ஒப்புக் கொண்டார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மின் துறையை தனியார்மயமாக்கமாட் டோம் என்று துணை முதல்வர் அறிவித் தார்.

ஒழுங்குமுறை ஆணையங்கள் மூலம் இணை உரிமங்களுக்கான எந்த  நடவடிக்கையையும் அரசாங்கம் மேற் கொள்ளாது; மேலும் மின் உற்பத்தி  - விநியோகம் - பரிமாற்றம் ஆகிய துறைகளில் ஐம்பதாயிரம் கோடி  ரூபாயை அரசு மூன்றாண்டுகளுக்குள் செலவிடும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து போராட்டத் தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங் கங்கள் அறிவித்தன. ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வாழ்த்து தெரி வித்துள்ளன.

மோடி அரசுக்கு பலத்த அடி

நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட மின்சார சட்டத் திருத்த மசோதா மூலம் நாட்டின் மின் விநியோ கத் துறையை முற்றிலும் தனியார்மய மாக்கத் தயாராகி வரும் மோடி அரசுக்கு மகாராஷ்டிர மின் ஊழியர்களின் ஒன்று பட்ட வேலைநிறுத்தத்தின் வெற்றி பலத்த  அடியாக அமைந்துள்ளது. மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை, ஏற்கனவே உ.பி., காஷ்மீர், புதுச்சேரியில் உள்ள ஊழியர்களின் கூட்டுப் போராட்டங்களின் மூலம் முறி யடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிஐடியு வாழ்த்து

மின்துறையை அதானியிடம் தாரை வார்க்கும் மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசின் நடவடிக்கையை முறியடித்த பொதுத்துறை மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு சிஐடியு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ்மாவை பயன்படுத்தி வேலை நிறுத்தத்தை ஒடுக்கும் அரசின் நட வடிக்கையை எதிர்த்து ஊழியர்கள் வெற்றி கண்டுள்ளனர். மகாராஷ்டிர மின்துறையைச் சேர்ந்த சுமார் 86,000 தொழிலாளர்கள், பொறி யாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் மூன்று நாள் அடையாள  வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்த னர். செவ்வாயன்று நள்ளிரவு தொடங்கிய வேலை நிறுத்தத்தில் நூறு சதவிகித ஊழியர்கள் கலந்து கொண்டனர். நவி மும்பையில் உள்ள பாண்டுப் மின்வட்டத்தின் மின்சார விநியோகத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இணை உரிமம் கோரி அதானி குழுமம் தாக்கல் செய்த விண்ணப்பத்தின் உள்ளடக்கம் முற்றிலும் பொய்யானதும் மிகவும் தவறானதுமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையின் வெற்றி:  எளமரம் கரீம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலங்களவை தலைவர் எளமரம்  கரீம் கூறுகையில், ஆரம்பத்தில் பேச்சு வார்த்தைக்கு கூட அரசு தயாராக இல்லை. தொழிலாளர்கள், பொறியா ளர்கள் உட்பட மின்துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், அரசு மண்டியிட்டது. இதற்கு முன்பு உத்தரப்பிரதேசம், சண்டிகர், புதுச்சேரி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் மின்சார தனியார் மயமாக்கல் நடவடிக்கை ஒருங்கி ணைந்த போராட்டத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டது என்று கூறினார்.