states

img

போராடக் கற்றுக் கொடுக்கும் காதல் - கே. வனஜகுமாரி

உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடினாலும் இந்தியாவில் மட்டும் காதல் என்றால் அன்று முதல் இன்று  வரை சமூகத்தின் ஒரு தரப்பு எதிர்த்துக் கொண்டே இருக்கிறது. தாக்குதலுக்கும் வெறுப்புக்கும் உள்ளாவ தால் காதல் போராட கற்றுக் கொடுக்கிறது. தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைக்கு விடுதலை கிடைக்கிறது. வாழ கற்றுக் கொடுக்கிறது.  இதை ஏற்றுக் கொள்ளாத சமூக கட்ட மைப்பு காதலிப்பவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்குகிறது, கொடூரமாக கொலை செய்கிறது. மகள் என்று பார்ப்பதில்லை; மகன் என்றும் பார்ப்பது இல்லை; உறவினர் என்றும் பார்ப்பதில்லை;  தாழ்ந்த சாதி, வேறு மதம் என்று மட்டும் பார்க்கப்படுகிறது. இத்தகைய தாக்குதல்களை கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும்.  இதுஒரு புறம் இருக்க, உண்மையான காதல் என்றால் என்ன என்பதற்கு இருவேறு அரசியல் தலைவர்களின்  வாழ்க்கையைக் குறிப்பிடலாம். காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி - சோனியா காந்தி தம்பதியர்  காதல் மணம் புரிந்தவர்கள்.   ராஜீவ் காந்தி இந்தியர். சோனியா காந்தி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ராஜீவ் தாயார் அன்றைய பிர தமர் இந்திரா காந்தி அவர்கள்,  சுட்டுக் கொல் லப்பட்டார். பிறகு பிரதமர் ஆக ராஜீவ் காந்தி தேர்வானார்.

அவரும் தீவிரவாதி களால்வெடிகுண்டு வைத்து கொல்லப் பட்டார். இவ்வளவு பெரிய தாக்குதலையும் சந்தித்து இன்றும் அரசியலில் களம் கண்டு நிற்கிறார் சோனியா. எதிர்ப்புகளையும் தடைகளையும் கடந்து அச்சப்படாமல் தைரியமாக அடுத்து தன் பிள்ளைக்கு அப்படிப்பட்ட தாக்குதல் வந்து விடும் என்ற அச்சம் இல்லாமல் அவரது கட்சியை இன்று வரை தன்னம்பிக்கையோடு வழி நடத்திச் செல்கிறார் என்றால் இவரின் புரிதலும் ராஜீவ் மீதான காதலும் தான் காரணம். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் 102 வயதில் காலமான தோழர் சங்கரய்யா, நவ மணி  அம்மையாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் நாடு சுதந்திரம் அடைய வெள்ளையனை எதிர்த்து போராட் டத்தில் பலமுறை சிறைக்குச் சென்றவர். சுதந்திரம் பெற்ற பிறகும் அவர் சார்ந்து இருக்கும்  கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சி யாளர்கள் தடை செய்தனர். சிறைக்குச் சென்றார். அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டார். தலை மறைவு வாழ்க்கை நடத்தி னார். அத்தனையையும் தன் கணவர் சமூக மாற்றத்திற்கான போராளி என்பதை உணர்ந்து தன் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு கணவருக்கும் உதவியாக இருந்தார். பின்னாளில் இவரது உறவினர் களும்  இவருடைய போராட்டத்திற்கு ஆதர வாக இருந்தனர். இவர்களுடைய குடும்பத் திருமணங்கள் அனைத்தும் சாதிமத மறுப்பு திருமணங்கள். காதல் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தி. காதல் வளர்ப்போம்; காதலர்களை வாழ்த்துவோம்!