மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி
புதுதில்லி, மார்ச் 16- அதானி குழுமத்தில் முதலீடு செய் துள்ள மொரீஷியஸ் போலி நிறுவனம், கர்நாடகத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தின் இணை உரிமையாளராக இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மோடி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி களும் வலியுறுத்தியுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஆல்பா டிசைன் டெக்னாலஜீஸ்’ என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், பாதுகாப்பு மின்னணு கருவிகள் உரு வாக்கம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பணி களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அதானி குழு மத்தைச் சேர்ந்த அதானி டிபென்ஸிற்கு (Adani Defence) 26 சதவிகித பங்குகள் உள்ள நிலையில், டிசம்பர் 31, 2022 நில வரப்படி, அதானி குழுமத்தைச் சேர்ந்த 3 நிறுவனங்களில் (அதானி எண்டர்பிரை சஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல்) பங்குகளை வைத்திருக்கும் மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ‘எலாரா இந்தியா ஆப்பர்ச்யூனிட்டீஸ் பண்ட்’ என்ற போலி நிறுவனமும் 25.65 சதவிகித பங்கு களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் மொத்த பங்கு களில் 51 சதவிகித பங்குகளைக் வைத்தி ருப்பவரே, அந்த நிறுவனத்தின் உரிமை யாளராகக் கருதப்படுகிறார். அந்த வகை யில், ‘ஆல்பா டிசைன் டெக்னாலஜீஸ்’ நிறு வனத்தில் நேரடியாகவும் மறைமுகமாக வும் 51.65 சதவிகித பங்குகளை அதானி குழும நிறுவனமும், அதானி குழும நிறு வனங்களின் பங்குகளை தன்வசம் வைத் துள்ள ‘எலாரா இந்தியா ஆப்பர்ச்சுனிட் டீஸ் பண்ட்’ நிறுவனமும் கொண்டுள்ளன. இதில் தனித்து 26.65 சதவிகித பங்கு களை வைத்துள்ளது என்ற அடிப்படை யில், மொரீஷியசின் எலாரா நிறுவனம், ‘ஆல்பா டிசைன் டெக்னாலஜீஸ்’ நிறு வனத்தின் இணை உரிமையாளராகவும் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் (The Indian Space Research Organisation - ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (The Defence Research and Development Organisation - DRDO) ஆகியவற்றுடன் ஆல்பா நிறுவனம் நெருங்கி பணியாற்றி வருகிறது. பிக்கோரா ஏவுகணை, ரேடார் கருவிகளை மேம்படுத்துவதற்கான காண்ட்ராக்டுகளை ஆல்பா நிறு வனத்திற்குத்தான் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த காண்ட்ராக்டுகளின் மதிப்பு மட்டும் ரூ. 590 கோடி. இந்த வகையில், ஆல்பா நிறு வனமானது, இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த நிறு வனமாக கருதப்படுகிறது. ஆனால், அதன் நிறுவனத்தின் இணை உரிமையாளராக வெளிநாட்டைச் சேர்ந்த எலாரா நிறுவனம் இருப்பதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. அதானி மற்றும் எலாரா என்ற போலி வெளிநாட்டு நிறுவனத்துக்குச் சொந்த மான ஆல்பா நிறுவனத்திடம் இந்தியா வின் ஏவுகணை மற்றும் ரேடாரை மேம் படுத்தும் காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது எப்படி? எலாரா நிறுவனம் யார் கட்டுப் பாட்டில் உள்ளது? முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி யின் கட்டுப்பாட்டை, உரிமையாளர் யார் என்றே அடையாளம் தெரியாத வெளி நாட்டு நிறுவனங்களிடம் வழங்கி, இந்தியா வின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள் வது ஏன்? என்று கேள்விகள் எழுந்துள ளன.
‘ஆல்ஃபா போன்ற நிறுவனத்தில் முத லீடு செய்ய எலாராவுக்கு எப்படி அனு மதி கிடைத்தது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். “முக்கியத்து வம் வாய்ந்த பாதுகாப்புத் துறை காண்ட் ராக்டுகள் முகவரி தெரியாத வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள் ளன. இப்படியெல்லாம் யாரும் எதிர் பாராத காரியங்களை செய்து அதிர்ச்சி யளிப்பதற்காக டிஆர்டிஓ மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு ஆஸ்கர் விருது அளிக்க வேண்டும்” என்று திரிணா முல் எம்.பி. மஹூவா மொய்த்ரா சாடி யுள்ளார். “ஆல்பா நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை அதானி மற்றும் எலாரா நிறு வனங்கள் வைத்திருப்பது தற்செயலா னதா? அப்படியானால் அது அற்புதமான தற்செயல் நிகழ்வு!” என்று சிவசேனா (உத் தவ் பாலாசாகேப் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி விமர்சித்துள்ளார். “இந்தியாவின் ஏவுகணை மற்றும் ரேடார் மேம்படுத்தல் ஒப்பந்தம் அதா னிக்கு சொந்தமான நிறுவனத்திற்கும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு நிறுவன மான எலாராவுக்கும் கொடுக்கப்பட்டுள் ளது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு எதிர்க்கட்சிகளின் கேள் விக்கு உள்ளாகி இருக்கும், ‘எலாரா ஆப்பர்ச்யூனிட்டீஸ் பண்ட்’ நிறுவனம், அதானி குழுமத்தைச் சேர்ந்த 3 நிறு வனங்களில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்திருப்ப தாக கூறினாலும், உண்மையில் இந்த நிறு வனம், உறவினர்களின் பெயரில் அதா னியே நடத்திவரும் போலி நிறுவனம்தான் என்று ஏற்கெனவே பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. உலக முதலீடுகளை ஈர்க்கும் வகை யில் வியக்கவைக்கும் வரிச்சலுகை, முத லீட்டாளர்களின் அடையாளங்களை மறைக்கும் வசதிகள் என மொரீஷியஸ் சட்டத் திட்டங்கள் அமைந்து இருப்பதால், இதனை அதானி தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை துவங்கி, வேறு யாரோ இந்த நிறுவனங்களை நடத்துவது போல காட்டியும், இங்கிருந்து அங்கும், அங்கி ருந்து இங்குமாக முதலீடுகளை மாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகிறார் என்பது தான் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை முன்வைத்த குற்றச்சாட்டில் முக்கியமான தாகும். எலாரா இந்தியா ஆப்பர்ச்யூனிட்டீஸ் பண்ட் (Elara India Opportunities Fund), கிரெஸ்டா பண்ட் (Cresta Fund), அல்புலா இண்வெஸ்ட்மெண்ட் பண்ட் (Albula Investment Fund), ஏபிஎம்எஸ் இண் வெஸ்ட்மெண்ட் பண்ட் (APMS Invest ment Fund) ஆகியவை மொரீஷியஸ் நாட்டில் இயங்கி வரும் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் 2 நிறுவனங்கள் பண மோசடி புகார்களிலும் 1 நிறுவனம் வங்கிக் கடன் மோசடியிலும் சிக்கியிருப்பவை ஆகும். மற்றொரு நிறுவனம் எத்தி யோப்பிய அரசால் தடைசெய்யப்பட்டது ஆகும். ஆனால், இந்த 4 நிறுவனங்களின் மொத்த முதலீடுகளில் 97 சதவிகிதம், அதானியின் முதலீடுகள்தான் என்பதும், இந்த நிறுவனங்களில் மொத்தம் 51 ஆயி ரத்து 360 கோடி ரூபாய் அளவிற்கு அதானி யின் முதலீடுகள் உள்ளன என்பதும் அண் மையில் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆனால், ஆவணங்களின்படி, ‘எலாரா இந்தியா ஆப்பர்ச்யூனிட்டீஸ் பண்ட்’ என்பது, ‘எலாரா கேபிடல்’ (Elara Capital) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது இந்தியாவைச் சேர்ந்த ராஜ் பட் என்பவரால் 2002-ஆம் ஆண்டில் தொடங் கப்பட்டதாக காட்டப்படுகிறது. இந்நிறு வனம் லண்டனில் மட்டுமல்லாமல் மும்பை, அகமதாபாத் நகர்களிலும், நியூ யார்க், மொரீசியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடு களிலும் இயங்கி வருகிறது. இங்கிலாந் தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்ச னின் சகோதரர் ஜோ ஜான்சன், இந்த நிறு வனத்தில் நிர்வாகக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். ஆனால், அதானி - எலாரா தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 1 அன்று ‘எலாரா கேபிடல்’ நிர்வாகக் குழு வில் இருந்து ஜோ ஜான்சன் ராஜினாமா செய்து விட்டு ஒதுங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ‘ஆல்பா டிசைன் டெக்னா லஜீஸ்’ விவகாரத்தைப் பொறுத்தவரை அதானி டிபென்ஸ் பெயரில் நேரடியாக 26 சதவிகிதம், ‘எலாரா இந்தியா ஆப் பர்ச்யூனிட்டீஸ் பண்ட்’ பெயரில் மறைமுக மாக 25.65 சதவிகிதம் என மொத்தம் 51.65 சதவிகிதப் பங்குகளுக்கும் உண்மையான உரிமையாளர் அதானிதான் என்ற சந்தேக மும் எழுப்பப்படுகிறது. இதுதொடர்பா கவே மோடி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் கோரிக்கைகள் ஆகும்.