states

அதானி நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு ரூ.74 ஆயிரம் கோடியாக அதிகரித்தது!

புதுதில்லி, டிச. 4 -  பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள அதானி குழுமத்தின் 7 நிறுவ னங்களில் எல்ஐசி முதலீடு செய்திருப்ப தாகவும், இந்த முதலீட்டின் மதிப்பு தற்போது ரூ. 74 ஆயிரத்து 142 கோடியே அதிகரித்து இருப்பதாகவும் செய்தி கள் வெளியாகியுள்ளன. எல்ஐசி-யின் இந்த ரூ. 74 ஆயிரம் கோடி முதலீடானது, அதானி குழு மத்தின் மொத்த சந்தை மூலதனமான ரூ. 18 லட்சத்து 98 ஆயிரத்தில் 3.9 சத விகிதம் என்று அந்த செய்திகள் தெரி விக்கின்றன. அதானி குழுமத்திடமிருந்து, 2020 செப்டம்பர் முதல் 2022 செப்டம்பர் வரை யிலான 2 ஆண்டுகளுக்கு உள்ளேயே ரூ. 74 ஆயிரம் கோடி அளவிற்கான பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு, இது தொடர்பான ஆய்வை நடத்தி, அதன் முடிவுகளைத் தற்போது வெளி யிட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸில், எல்ஐசியின் பங்கு 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தது. இது தற்போது 4.02 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதானி டோட்டல் கேஸில் 1 சதவிகி தத்துக்கும் குறைவாக இருந்தது, தற் போது 5.77 சதவிகிதமாக உயர்ந்துள் ளது. இதேபோல அதானி டிரான்ஸ்மிஷ னில், எல்ஐசியின் பங்கு 2.42 சதவிகி தத்தில் இருந்து 3.46 சதவிகிதமாகவும், அதானி கிரீன் எனர்ஜியில், 1 சதவிகி தத்துக்கும் குறைவாக இருந்து, தற்போது அது 1.15 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. அதானி போர்ட் ஸில் எல்ஐசி ஹோல்டிங் 9.61 சதவிகி தமாக உள்ளது. அதானி பவர் மற்றும் அதானி வில்மர் ஆகிய நிறுவனங்க ளில் மட்டுமே எல்ஐசி-யின் முதலீடு 1 சதவிகிதத்திற்கு கீழ் உள்ளது.

அக்டோபர் 31, 2022 நிலவரப்படி, ஈக்விட்டி பண்டுகளின் மொத்த சொத்து களான ரூ. 15.22 லட்சம் கோடியில் வெறும் ரூ. 15 ஆயிரத்து 701 கோடி அல்லது வெறும் 1 சதவிகிதம் மட்டுமே அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எல்ஐசி யின் முதலீடானது அதானி குழும நிறு வனங்களில் உள்ள அனைத்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் பங்குகளின் மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகமா கும். கடந்த இரண்டு ஆண்டுகளில், அதானி குழும நிறுவனங்களின் பங்கு களை எல்ஐசி வாங்கியதால், அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் 2020 செப்டம்பர் 30 அன்று ரூ. 2.78 லட்சம் கோடியிலிருந்து சுமார் ஏழு மடங்கு அதிகரித்து ரூ. 18 லட்சத்து 98 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த 2  ஆண்டுகளில் அதானி குழும நிறுவ னங்களில் எல்ஐசிபங்குகளின் மதிப்பும் 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல டாடா குழும நிறுவனங் கள் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும நிறுவனங்களிலும் எல்ஐசி முதலீடு செய்துள்ளது.  டாடா குழுமத்தின் மொத்த சந்தை மூலதனம் ரூ. 21 லட்சத்து 91 ஆயிரம் கோடியில், எல்ஐசி-யின் முதலீடானது 3.98 சதவிகிதமாக உள்ளது. மியூச்சு வல் பண்டுகளில் 4.9 சதவிகிதத்தை எல்ஐசி வைத்திருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் சந்தை மதிப்பான ரூ. 18 லட்சத்து 42 ஆயிரம் கோடியில், 6.45 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்திருக்கிறது. மியூச்சுவல் பண்டுகளில் 5.68 சதவிகி தம் அளவிற்கு முதலீடு செய்துள்ளது.