பட்ஜெட்டை பற்றி பிறகு பேசலாம். முதலில் கும்பமேளாவில் உயிரிழந்தவர்களை பற்றி பேச வேண்டும். அடுத்தது சம்பவ இடத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் எப்போது செல்வார் என்ற கேள்விக்கு பதில் வேண்டும். நிவாரணம் கொடுக்காமல் இருக்க, இறப்பு எண்ணிக்கையை பாஜக அரசாங்கம் மறைத்து வருகிறது. இச்சம்பவம் அரசாங்கத்தின் தவறால்தான் நேர்ந்திருக்கிறது.
நான் கும்பமேளா செல்லவில்லை. ஆனால் நான் அங்கு சென்றதாக புகைப்படம் வெளியாகியுள்ளது. சிறிதும் உண்மை இல்லாத போலி செய்திகளை பரப்புவது “மதவெறி பிடித்த கோழைகளின்” கடைசி வேலை ஆகும்.
தில்லியில் 10 ஆண்டுகளாக மக்களுக்காக நான் நிறைய வேலை செய்துள்ளேன். இதுதான் பாஜகவைத் தொந்தரவு செய்திருக்கிறது. பாஜகவினர் இப்போது காவல்துறையைப் பயன்படுத்தி தில்லி தேர்தலில் போட்டியிடுவது போல் தெரிகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மஹாயுதி அரசாங்கத்தில் 65 சதவீத அமைச்சர்கள் “கறைபடிந்தவர்கள்”. கடந்த மாதமே அமைச்சரவை பதவியேற்றாலும் பெரும்பாலான அமைச்சர்கள் இன்னும் பணியைத் தொடங்கவில்லை. இது மோசமானது.
பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டால் நடிகை ஸ்வரா பாஸ்கரின் டுவிட்டர் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், அவர் தனது கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட தாக புகார் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் மலையடி வார பகுதிகளில் நள்ளிரவு சிறுத்தை நடமாடி வருகிறது. சாலையிலேயே சிறுத்தை சுற்றி திரிவதால் பக்தர்கள் மலையேற அஞ்சி வருகின்றனர்.
கும்பமேளாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச பாஜக அர சால் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய நீதி விசாரணை ஆணையம் வெள்ளிக்கிழமை அலகாபாத் சென்று ஆய்வைத் தொடங்கியது.