states

பிபிசி செய்தியும் - ஏர் இந்தியா உடன்பாடும்

பொருளாதாரம் வளர்வதோடு அடுத்த மட்டத்திற்கு முன்னேறு வோம் என்ற எங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு நல்ல ஆதரவாகவும் இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் சுனக் கருத்து தெரிவித்துள்ளார். பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரனை, தனது நண்பர் என மோடியும், இரு நாடுகளும் கேந்திர கூட்டாளிகளாக இருப்போம் என்று மேக்ரனும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

பிபிசியின் இந்திய அலுவலகங்களில் வருமான வரித்்துறையினர் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிற அதே நாளில் டாடா நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்ட ஏர்இந்தியா நிறுவனத்திற்கு 470 அமெரிக்க உற்பத்தியான போயிங் ரக விமானங்களும் மற்றும் பிரான்சில் உற்பத்தியாகும் ஏர்பஸ் விமானங்களும் கொள்முதல் செய்வதற்கான அறி விப்பினை பிரதமர் மோடி வெளியிட்டார்.  அமெரிக்க மற்றும் பிரான்சு நாடுகளுடன் இந்தியா  கேந்திரமான பங்காளியாக வலுவடைந்து வருகிறது என்று மோடி உரையாற்றும் வேளையில் மறுபுறத்தில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டு பாஜகவின் தலைவர்கள் எதிர்க்கட்சிகளின் உதவியோடு பிபிசி இந்தியாவிற்கு எதிரான நிகழ்ச்சி நிரலை எடுத்துக்கொண்டு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டி பேசி வந்தனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் வீடியோ காட்சி மூலமும், அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசி மூலமாகவும் மோடி விமான கொள்முதல் உடன்பாடு பற்றி  பேசி கொண்டாடிக் கொண்டார்.  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த விமான கொள்முதல் உடன்பாட்டின் வாயிலாக ஏர்பஸ் விமானங்களின் என்ஜின் உற்பத்தி செய்யும் பிரிட்டனின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மூலமாக பிரிட்டனும் பலன் பெறுகிறது என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மேற்கத்திய நாடுகளுடன் தங்களுடைய இந்துத்துவா கோட்பாடுகளை இணைத்துச் செல்லும் விருப்பத்தை மோடி  உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். மோடி தன்னுடைய உரையில், அடிக்கடி 3டி -க்களை குறிப்பிடுவார் அதாவது ஜனநாயகம் (Democrcy), தேவை (Demand), மக்கள் தொகை (Democrahic). இவை மூன்றும் மேற்கத்திய நாடுகளை இந்தியா வின் பக்கம் வர்த்தகத்திற்காக  ஈர்த்திடும் காரணிகளாகும் என்று குறிப்பிடு வார். 2014இல் இந்த 3 டி பற்றி குறிப்பிடும்போது அமெரிக்கா, சீனாவுடன் வலுவான பொருளாதார வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. சில வருடங்க ளுக்கு பின்னர் சீன- அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டது. ரஷ்யா உக்ரைன் போர் நிகழ்வுகளும் முன்னுக்கு வந்தது. தற்போது அமெரிக்காவின் ஜோபைடன் நிர்வாகம் சர்வதேச அரசி யலில் புதிய வடிவத்தை கொண்டு வர விரும்புகிறது. அதாவது சர்வதேச  அரசியலின் அடிப்படையான தத்துவத்தில்  ஜனநாயகத்திற்கும் சர்வாதிகா ரத்திற்கும் இடையே ஒரு வேறுபாட்டை  முன்னிறுத்துகிறது. கடந்த செவ்வாய் கிழமையின்போது மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் இந்தியாவின் வான்வெளி சந்தை விரிவாக்க வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தார்.

முதலாவது டி யை பொறுத்தளவிலும் மேற்கத்திய நாடுகள் எப்போதாவது தங்களுடைய எதிர்ப்புக்களை முணுமுணுத்தன. ஆனால் அதேசமயம் இரண்டாவது டி - க்கான வாய்ப்பு வரும்போது  அவர்களுடைய ஆவலை அவர்களால் மறைக்க முடியவில்லை. ஏர் இந்தியாவின் விமானக் கொள்முதல் ஆர்டர் போயிங் நிறுவனத்தின் மற்ற எல்லா காலங்களைக் காட்டிலும் டாலர் மதிப்பில் மூன்றாவது மிகப் பெரிய ஆர்டராகும்.  விற்பனை எண்ணிக்கை யில் இரண்டாவது மிகப் பெரிய ஆர்டராகும்.  இந்த கொள்முதல் மூலம் அமெரிக்காவின் 44 மாகாணங்களில் 10 லட்சம் அமெரிக்க  வேலைவாய்ப்புக்களுக்கு உதவி செய்யும். அதேசமயம் இதன் பெரும்பான்மையான வேலைகளுக்கு நான்காண்டு கல்லூரிப்படிப்பு படித்த மாணவர்கள் தேவையற்றவர்கள் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்த உடன்பாடு பற்றி தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது. 

ஏர்பஸ் விமான ஆர்டர் நல்ல சம்பள வேலைகளையும். டர்பை முதல் வேல்ஸ்  வரை உற்பத்தித் துறையில் புதிய வாய்ப்புக்களை வழங்கி ஆதரவாக இருக்கும், மேலும் பொருளாதாரம் வளர்வதோடு அடுத்த மட்டத்திற்கு முன்னேறு வோம் என்ற எங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு நல்ல ஆதரவாகவும் இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் சுனக் கருத்து தெரிவித்துள்ளார். பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரனை, தனது நண்பர் என மோடியும், இரு நாடுகளும் கேந்திர கூட்டாளிகளாக இருப்போம் என்று மேக்ரனும் உற்சாகத்துடன் தெரிவித்தனர். இந்திய மக்களால் வலுவாக இயங்கி வரும் இந்தியச் சந்தையின் மோகம் இரண்டாவது டி-யை காட்டிலும் வலுவானதாக தோன்றுகிறது. பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையை பற்றி பிரிட்டன் அரசு இதுவரையிலும் மௌனமாக இருந்து வருகிறது.  அமெரிக்கா அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் ஜனநாயகத்தில் சுதந்திரமான பத்திரிகை, ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மட்டும் பேசியவர் இதன் மீதான நீதியினை வழங்குவதற்கு தயாராகவில்லை. பிரைஸ் மேலும் குறிப்பிடுகையில் ஜனநாயக மாண்புகளுக்கு எதிரான நடவடிக்கை களுக்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியாது , இந்த விசாரனை பற்றிய உண்மை விபரங்களுக்காக காத்திருக்கிறோம் என்கிறார். 

பாஜகவை பொறுத்தளவிலும் பிபிசி ஒரு சுதந்திரமான செய்தி நிறுவனம் அல்ல, அது தேச விரோத நிகழ்ச்சி நிரலுடன் வேலை செய்து வரும் ஒரு அந்நிய சக்தி என்கிறது. இது மேற்கத்திய ஜனநாயகத்திற்கே உரித்தான இயல்பான தந்திரம். அமெரிக்கவும், ஐரோப்பிய யூனியனும் ரஷ்ய செய்தி நிறுவனங்களை தடை செய்ததும் இதைப்போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான். 2021 ஜனவரியில் தில்லியில் விவசாயிகள் மீது மோடி அரசு, மேற் கொண்ட கொடூரத் தாக்குதல்களை அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் விமர்ச னத்திற்கு உள்ளாக்கியது. உலகளவில் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகா ரத்திற்கும் இடையே போட்டிகள் பலவிதமான முரண்பாடுகளுடன் கதைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஜனநாயக நாடுகளுக்குள் ஏற்படும் கலகங்களை, எந்தவொரு கூற்றுக்களையும் வல்லரசுகள் குறைத்து மதிப்பீடு செய்கின்றன.   இந்துத்துவ சக்திகளுக்கு, தங்களது தேசிய நோக்கங்களுக்காக மேற்கத்திய நாடுகளின் உதவிகளும் ஒத்துழைப்பும்  தேவைப்படுகிறது. எனவே மேற் கத்திய தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளும் கோரப்படும் அதே நேரத்தில் உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளில் மேற்கத்திய பாணியில் தலையிடக் கூடாது என்ற கடும் எதிர்ப்பையும் கொண்டுள்ளன. மற்றொருபுறம் உறுதியான வர்த்தக வாய்ப்பா அல்லது தார்மீக நோக்கமா என்பதை தேர்வு செய்யும் சமயத்தில் மேற்கத்திய அரசுகள் ஒருபோதும் குழப்பமடைவதில்லை.

நன்றி: (16.2.2023) தி இந்து நாளிதழ், வர்க்கீஸ் கே.ஜார்ஜ்,
தமிழில்: எஸ்.ஏ.மாணிக்கம்