மகாராஷ்டிராவில் இடதுசாரி கட்சிகள் பிரம்மாண்ட பேரணி - போராட்டம்'
சிறப்பு பொதுப் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறுக!
50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மும்பை மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்த கூட்டணி அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் “சிறப்பு பொது பாதுகாப்பு மசோ தாவை (ஜன் சுரக்சா மசோதா)” அம்மாநில சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. தனிநபர்கள் அல்லது அமைப்புகளின் சட்ட விரோத செயல்களைக் கட்டுப் படுத்துவதே மசோதாவின் நோக்கம் என்பது அரசின் கூற்றாக இருந்தாலும், மசோதாவின் தெளிவின்மை காரணமாக அது வெறும் வெற்றுரையாக உள்ளது. மசோதாவின் உண்மையான நோக் கம் என்னவென்றால் ஒழுங்க மைக்கப்பட்ட ஜனநாயக ஆதரவு களின் குரல் மற்றும் செயல்களை ஒடுக்குவதாகும். அதாவது மாநில பாஜக கூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை ஒடுக்கவும், அரசின் அராஜக முடிவை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தாமல் அவர்களின் ஜன நாயக உரிமையை பறிக்கவே இந்த சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா வை மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசாங்கம் நிறைவேற்ற துடி யாய்த் துடித்து வருகிறது. மசோதா நிறைவேற்றப்பட்டால் குறைந்த பட்ச நிலை காவல் அதிகாரிகளு க்கு கூட கடுமையான அதிகாரங்க ளை வழங்கும் சூழல் உருவாகும். இந்த மசோதாவை அறிமுகம் செய்த அடுத்த நாளே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகா ராஷ்டிரா மாநிலக்குழு கடும் கண்ட னம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டது. தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற சிபிஎம் மாநி லக்குழு கூட்டத்தில்,”சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் 30,000க்கும் மேற்பட்டோரை திரட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை, பார்வர்டு பிளாக், லால் நிஷான் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் சிறப்பு பொது பாதுகாப்பு மசோ தாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து மகாராஷ்டிரா முழுவதும் பேரணியுடன் பிரம்மாண்ட அள வில் போராட்டங்களை நடத்தினர். சுமார் 50,000-க்கும் மேற் பட்டோர் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். குறிப்பாக சிபிஎம் மாநிலக்குழு வில் எடுத்த முடிவின்படி தானே-பால்கர் (10 மையங்களில் 22,100), சோலாப்பூர் (2 மையங்களில் 7,000), நாசிக் (7 மையங்களில் 5,000), அஹில்யாநகர் (1 மையத் தில் 1,500), மும்பை (1 மையத் தில் 600), புனே (2 மையங்களில் 480) மற்றும் பல இடங்களில் என மொத்தம் 35,930 பேரைத் திரட்டி, போ ராட்டக் களத்தில் சிபிஎம் தலை வர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் அசோக் தாவ்லே, மரியம் தாவ்லே, மகாராஷ்டிரா மாநிலச் செயலாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான டாக்டர் அஜித் நவாலே, மூத்த தலைவர் நரசய்யா ஆதம், மத்தியக் குழு உறுப்பினரும், தஹானு சட்டமன்ற உறுப்பினருமான வினோத் நிகோ லே, முன்னாள் எம்எல்ஏ ஜே.பி.காவித், டாக்டர்.உதய் நர்கர், மாநில செயற்குழு மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
உபா சட்டத்தை விட மோசமானது
உபா என்பது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act) ஆகும். இந்த உபா சட்டத்தை விட மோசமான, மிகவும் தன்னிச் சையான மற்றும் சர்வாதிகார விதிகளைக் கொண்ட இந்தக் கொடூரமான சிறப்பு பொதுப் பாதுகாப்பு மசோதா தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான கடு மையான ஆட்சேபணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.