states

img

துணைவேந்தர்களை பதவி விலகுமாறு கேரள ஆளுநர் மிரட்டல்

திருவனந்தபுரம், அக்.25- கேரளத்தில் 9 துணைவேந்தர்களை ராஜி நாமா செய்யக் கூறிய ஆளுநர் ஆரிப் முகம்  மது கானின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்து, மாநிலம் முழுவதும் இரண்டுநாள் கண்  டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இஜமு அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கேரளாவில் உயர்கல்வி பெரும் பாய்ச் சலை நோக்கி முன்னேறி வருகிறது. ஆய்வின் அடிப்படையில் கேரளாவின் பல்கலைக்கழ கங்கள் சிறந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்  ளன. உயர்கல்வித்துறையில் 3 கமிஷன்கள் நியமனம் மற்றும் அதன் அடிப்படையில் அளிக் கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், துணைவேந்தர்களை ராஜினாமா  செய்யுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். உயர்கல்வித் துறையைக் கைப்பற்றி அதன் மதச்சார்பற்ற நிலைப்பாட்டை சீர்குலைக்கும் சங்பரிவார்களின் நிகழ்ச்சி நிரலை, வலுவாகத் தடுத்து முன்னேறி வருகிறது கேரளா. இதைத்  தடுக்க, ஆர்.எஸ்.எஸ்., வழிகாட்டுதலின்படி, ஆளுநர் செயல்பட்டு வருகிறார். கேரளாவின் கல்வித் துறையை அழிக்கும் இத்தகைய நட வடிக்கைக்கு எதிராக கேரளாவை நேசிக்கும் ஒட்டுமொத்த மக்களிடமிருந்தும் வலுவான எதிர்ப்பு வர வேண்டும். ஆளுநருக்கு இல்லாத அதிகாரத்தை பயன்  படுத்தி சங்க பரிவாரத்தின் ஆணைகளை நிறை வேற்றுவதை அனுமதிக்க முடியாது. அதனை எதிர்கொள்ள பரந்த மக்கள் இயக்கம் எழுப்பப்  படும் என இ.பி.ஜெயராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.