பி.எப். திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும்!
புதுதில்லி, பிப். 10 - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழான குறைந்தபட்ச ஓய்வூதி யத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இடதுசாரிக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதனை ரூ. 9 ஆயிரமாக உயர்த்தக்கோரி தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கை யை கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கியது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தலாம் என்று பரிந்துரைத்தது. இத னை ஏற்க மறுத்துவிட்ட தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து அரசை வலி யுறுத்தி வருகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்த ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் பணியாளர் அமைச்ச கம் முடிவு செய்துள்ளதாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்தி வெளியானது. எனி னும், இதுவரை அரசு இந்த விவகாரத்தில் முடிவு எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசின் காலதாமதத்தைக் கண்டித்தும் தொழி லாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்தக்கோரியும் நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.