states

img

நேருவின் 59-ஆவது நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி

இந்தியாவின் முதல் பிரதமரும், உலகத்  தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவ ருமான ஜவஹர்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே 27 அன்று காலமானார். இந்நிலையில், அவரது 59-ஆவது நினைவுநாள் சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் அகில  இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,  காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, “நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.