states

‘ஜி-20’ உச்சி மாநாடு இன்று துவங்குகிறது: மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

புதுதில்லி, நவ. 14 - ‘ஜி-20’ நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.  இந்தோனேசியாவின் பாலி நகரில் நவ.15, 16 தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடை பெறுகிறது. இந்த உச்சி மாநாட்டையொட்டி, பாலி  நகரில் மொத்தம் 45 மணி நேரத்தை செலவிட விருக்கும் பிரதமர் மோடி, 10 நாடுகளின் தலை வர்களுடன் இருதரப்பு சந்திப்பு, இந்திய வம்சா வளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சி என சுமார் 20 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதில், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் கலந்து கொள்ளும் மோடி, உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து, ‘ஜி-20’ நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்கிறார். பாலியில் செவ்வாயன்று நடைபெற உள்ள வர வேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூக மக்களி டையே உரையாற்றுகிறார். ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஜி-20 அமைப்பின் தலை மைப் பொறுப்பை இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இந்தியாவிடம் ஒப்படைக்கி றார். இப்பொறுப்பை டிசம்பர் 1 முதல் இந்தியா  முறைப்படி ஏற்றுக் கொள்கிறது. ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா,  அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, தென்னாப்பி ரிக்கா, துருக்கி, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ்,  ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, சீனா, இந்தோ னேசியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடு கள் ஜி-20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.