states

நாடாளுமன்றம் - சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பணம் மிச்சமாகும்!

புதுதில்லி, மார்ச் 18 - நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்கள வையில் விளக்கம் அளித்துள்ளார். கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளிக்கப்பட்ட அந்த விளக்கத்தில் கிரண் ரிஜிஜூ கூறியிருப்பதாவது:  “நாடு முழுவதும் ஒரே நேத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, தேர்தல் ஆணை யம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நாடாளுமன்ற குழு கலந்தாலோசித்து சில பரிந்துரைகளை வழங்கியது. இந்த விவ காரத்தில் நடைமுறை சாத்தியம் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் அரசு கருவூலத்திற்கு சேமிப்பு ஏற்படும். தேர்தல் நடத்தை விதிமுறை களை மீண்டும் மீண்டும் அமல்படுத்துவ தால் நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் எதிர்மறை தாக்கம் ஏற்படுகிறது. அது தவிர்க்கப்படும். அதே போல, தேர்தலுக் காக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் செய்யும் செலவுகளும் குறைக்கப்படும்.  இந்த நடைமுறைக்கு மாறுவதற்கு- அதா வது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவர வேண்டி யது உள்ளது. அதற்கு முன்பாக, கூட்டாட்சி அமைப்பை கருத்தில் கொண்டு, அனைத்து மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிவது அவசியமாகும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிகப்படியான மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேவைப்படும். ஒரு இயந்தி ரத்தின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் மின்னணு இயந்திரங்களுக்காக பல ஆயிரம் கோடி நிதியை செலவழிக்க வேண்டியிருக்கும். மேலும் கூடுதல் வாக்கு மைய பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் தேவையும் இருக்கும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ, சாதக பாத கங்களை பட்டியலிட்டுள்ளார்.