states

img

வெளிநாட்டுப் படிப்புச் செலவுக்கு பணம் அனுப்புவது நடப்பாண்டில் 42 சதவிகிதம் வரை குறைந்தது!

புதுதில்லி, பிப். 25 - ‘தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப் பும் திட்டத்தின்’ கீழ் இந்தியர் ஒருவர் பயணம், பரிசு, வெளிநாட்டுப் படிப்பு, உற வினர்களைப் பராமரித்தல், சொத்து வாங்கு தல், மருத்துவ சிகிச்சை மற்றும் நன்கொடை கள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக ஆண்டுதோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் வரை அந்நியச் செலாவணியைப் பெறலாம். இந்த வகையில், அந்நியச் செலாவணி யைப் பெற்று, வெளிநாட்டுப் படிப்புக ளுக்கு பணம் அனுப்புவது, 2022-23 நிதி யாண்டின் முதல் 9 மாதங்களில் 42 சதவிகி தம் அளவிற்கு குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் ‘தாராள மயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத் தின்’ (Liberalised Remittance Scheme - LRS) கீழ் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய நிதி, நடப்பு 2022-23 நிதியாண் டில், டிசம்பர் 2022- உடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் 42 சதவிகிதம் குறைந்து 2.57 பில்லியன் டாலராக இருந்துள்ளது.  இதுவே, 2021-22 நிதியாண்டின் டிசம்பர்  ரையிலான 9 மாத காலத்தில் 4.4 பில்லி யன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, டிசம்பர் 2022 இல் முடி வடைந்த (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) காலாண்டில் மாணவர்கள் அனுப்பும் தொகை 667 மில்லியன் டாலராக குறைந் துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தில் 1.16 பில்லியன் டாலராக இருந்துள்ளது.

மாணவர்களுக்கு பணம் அனுப்புவ தில் ஏற்பட்டுள்ள இந்த சரிவுக்கு, உயரும்  பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களால் தூண்டப்பட்ட பெரிய வளர்ந்த பொருளா தாரங்களின் மந்த நிலைக்கு மத்தியில் விசா  பெறுவதில் உள்ள சிரமம் மற்றும் வேலை சூழ்நிலைகள் மீதான நிச்சயமற்ற தன்மை ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, ‘பாங்க் ஆப் பரோடா’ வின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸூம் பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில், “மாணவர்கள் அனுப்பும் பணத்தில், வீழ்ச்சி இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது, ஒன்று, பொதுவாக மாண வர்கள் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் நிலையில், விசா பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இரண்டாவதாக, வெளிநாடு செல்வதற்கான விருப்பமும் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு நிலையைப் பொறுத்தது. படிப்புக்காக வெளியூர் சென்றால், அதைத் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பது உறுதி இல்லை என்ற எண்ணம் இப்போது உள்ளது. இது ஒரு சிலரை அமெரிக்காவில் மேற்படிப்புக்கு செல்வ திலிருந்து விலக்கி வைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். “ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கல்விச் செலவு அதிகரித்து வருவதால் மாணவர் கள் உயர்கல்வி படிக்க முடியாமல் சிரமப் படுகின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.  “இந்திய மாணவர்கள் மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கே அதிகள வில் படிப்பிற்காக செல்கின்றனர். ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு, மாணவர் கள் இந்த நாடுகளுக்குச் செல்லவில்லை” என்று மற்றொரு வங்கியாளர் தெரி வித்துள்ளார்.  2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையி லான காலத்தில், அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 10 சதவிகி தத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. மறு புறத்தில், அமெரிக்கா மற்றும் இங்கி லாந்து போன்ற நாடுகளில் வாழ்க்கைச் செலவு 2022-ஆம் ஆண்டில் அதிகரித்துள் ளது குறிப்பிடத்தக்கது.