states

img

புலம்பெயர்ந்தோரை பாதுகாப்பதில் கேரளா முதலிடம்

புதுதில்லி, பிப்.16- நாட்டில் உள்ள புலம்பெயர் சமூ கத்திற்காக இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராடும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரி வித்தார். புதுதில்லி ஜந்தர் மந்தரில் கேரள பிரவாசி (புலம்பெயர்ந்தோர்) சங்  கத்தினர் நாடாளுமன்றம் நோக்கிச்  சென்ற பேரணியை வியாழனன்று துவக்கி வைத்த யெச்சூரி, “ மன்  மோகன் சிங் அரசு இடதுசாரிகளின்  அழுத்தத்தின் பேரில் வெளிநாட்டி னர் துறையை உருவாக்கியது. ஆனால்,  மோடி அரசு இதைத் தவிர்த்து விட் டது. ஆங்கிலேயர்கள் இயற்றிய குடி யேற்றச் சட்டத்தில் திருத்தம் செய்ய  வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய யெச்சூரி,  கொரோனா தொற்று காரணமாக  வேலையும் வருவாயும் இழந்து  திரும் பிய புலம்பெயர்ந்தோருக்காக கேரள அரசு பல நலத்திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. நாடு  முழுவதும் இதுபோன்ற திட்டங் களை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். போதுமான நிதியும் வழங்க வேண்டும்.  ஒன்றிய அரசி டம் போதுமான நிதியைப் பெறு வதற்கு ஒருங்கிணைந்த போராட் டங்களை நடத்த வேண்டும். ஒன்  றிய பட்ஜெட்டில் புலம்பெயர்ந்தோ ருக்கு பெரும் அநீதி இழைக்கப் பட்டுள்ளது என்றார்.  அரசியல் தலைமைக்குழு உறுப்  பினர் எம்.ஏ.பேபி பேசுகையில், “நாட்டிலேயே முதன்முதலாக வெளி மாநிலத்தவர்களுக்கான துறையை அமைத்த மாநிலம் கேரளம் தான்” என்றார். பேரணிக்கு பிரவாசி சங்க  மாநிலத் தலைவர் கஃபூர் பி லில்லீஸ், பொதுச்செயலாளர் கே.வி.அப்துல்  காதர், ஆர்.ஸ்ரீகிருஷ்ணபிள்ளை, பாதுஷா கடலுண்டி, பி.செய்தா லிக்குட்டி உட்பட ஏராளமானோர் பேர ணியில் பங்கேற்றனர்.