பிரியாணியும், பொரித்த கோழியும் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கேரள அரசு அங்கன்வாடி மெனுவும் மாற்றம்
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஒரு அங்கன்வாடி மையத்தில் ஷங்கு என்ற குழந்தை உப்புமா சாப்பிட்டுக் கொண்டே, அங்கன்வாடிகளில் உப்புமாவுக்கு பதி லாக பிரியாணி கொடுக்கலாமே என்று கேட்பதும், என்ன வேண்டும் என்று அவ ரது அம்மா கேட்டதும், அந்தக் குழந்தை யும் மிக அழகாக பிரியாணியும், பொரித்த கோழியும் உப்புமாவுக்கு பதிலாக வேண்டும் என்று சொல்லும் வீடியோ வைரலாகியிருந்தது. இந்த வீடியோ வைரலாகி 3 மாத காலத்தில் உண்மை யிலேயே அங்கன்வாடி மையங்களின் உணவு மெனுவில் பிரியாணி சேர்க்கப் பட்டுள்ளது. அதாவது அங்கன்வாடியில் உப்பு மாவுக்கு பதிலாக பிரியாணியும் பொரித்த கோழியும் சாப்பிட வேண்டும் என்ற ஷங்கு என்கிற மாணவனின் விருப்பத்தை கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நிறைவேற்றியுள்ளார். கடந்த கல்வி ஆண் டில் அமைச்சர் கூறியது போல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு மெனுவை திருத்தியுள்ளது. சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும், ஊட்டச்சத்து தரநிலைகளின்படி வளர்ச்சிக்கு உதவும் ஆற்றல் மற்றும் புரதத்தை சேர்ப்பதற்கும், அதை சுவை யாக மாற்றுவதற்கும் உணவு மெனு திருத்தப்பட்டது. அங்கன்வாடி குழந்தைகளுக்கான காலை உணவு, மதிய உணவு போன்ற வற்றை ஊட்டச்சத்து மிக்கதாக திருத் தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த உணவு மெனு செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. பத்தனம்திட்டாவில் நடை பெற்ற அங்கன்வாடி நுழைவு நிகழ்ச்சி மற்றும் மாநில அளவிலான தொடக்க விழாவில் அங்கன்வாடி குழந்தைகளுக் கான திருத்தப்பட்ட ‘மாதிரி உணவு மெனு வை’ அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டார். கடந்த ஆண்டு மழலை மொழியில் அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு குறித்து ஷங்கு பேசிய காணொலி அமைச்சர் வீணா ஜார்ஜ் கவனத்தில் பட்டது. ஷங்குவை நேரில் சந்தித்து அவ ரது கருத்தை பரிசீலித்து உணவு மெனு வை மதிப்பாய்வு செய்வதாக உறுதி யளித்தார். இதையடுத்து, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு மட்டங்களில் கூட்டத்தை நடத்தி, உணவுப் பட்டி யலைத் திருத்தியது. முட்டை பிரியாணி மற்றும் புலாவ் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் மெனு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தலா இரண்டு நாட்களுக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் முட்டைகள், தலா மூன்று நாட்களாக மாற்றப்பட்டுள்ளன.