புதுதில்லி, மார்ச் 24- குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார். தில்லியில் மௌலானா ஆசாத் சாலையில் உள்ள குடியரசு துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெள்ளியன்று (மார்ச் 24) முதல்வர் பினராயி வருகை தந்தார். சந்திப்பின்போது கேரளா மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. கேரளாவின் உயர் சமூக வளர்ச்சிக் குறி யீட்டை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். இது பெருமைக்குரிய சாத னை என்றார். கேரளாவுக்கு வருமாறு குடி யரசு துணைத் தலைவருக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். தான் சைனிக் பள்ளியில் படித்த காலத்தில் அதன் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த அவர், விரைவில் கேரளா வருவதாக கூறினார். பொன்னாடை அணிவித்ததோடு, தெய்யத்தின் காட்சி இடம் பெற்ற சிற்பத்தை, குடியரசு துணைத்தலை வருக்கு பரிசாக முதல்வர் வழங்கினார். குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் பின ராயி விஜயன் தில்லிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது. தலைமைச் செயலாளர் டாக்டர் வி.பி.ஜாய் மற்றும் கேரளா ஹவுஸ் ரெசிடென்ட் கமிஷனர் சவுரப் ஜெயின் ஆகியோர் உடனிருந்தனர்.