நாட்டிலேயே முதன்முறையாக பீகார் மாநில அரசு அக்.2 அன்று சாதிவாரி கணக்கெ டுப்பு புள்ளி விபரங் களை வெளியிட்டது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரி க்கை எழுந்துள்ள நிலை யில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ள தாக சனிக்கிழமை அறிவித்தது. தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான கர்நாடகாவும் சாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளி யிட முடிவு செய்துள்ளது. கடந்த 2013 முதல் 2018 வரை காங்கிரஸின் சித்த ராமையா கர்நாடக முதல்வராக இருந்த போது, பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆட்சி முடியும் தருவா யில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதால் அப்போது வெளியிடவில்லை. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த மதச்சார் பற்ற ஜனதாதளம், பாஜக ஆகிய இரு கட்சிகளும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை கிடப்பில் போட்டன. இந்நிலையில், மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பான விவாதம் எழுந்துள்ள நிலையில், தற்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்துக்கு தலைவராக இருக்கும் ஜெயபிரகாஷ் ஹெக்டேவிடம் நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.