states

img

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் கடும் அமளி!

மனித உரிமை ஆணையம் உ.பி., குஜராத் செல்லாதது ஏன்?
ஒன்றிய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

பீகாரில் கள்ளச்சாராய சாவுகள் தொடர்பான விவகாரத்தில், ஒன்றிய பாஜக அரசு, மனித உரிமைகள் ஆணையத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி எதிர்க்கட்சிகள் செவ்வாயன்று மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.  பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், சரண் மாவட்டம் சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில்  உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 74 பேர் பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தை பாஜக தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளைக் கொண்ட ஆளும் மகா கூட்டணி அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமன்றி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் மூலம், பீகார் அரசுக்கு நோட்டீஸூம் அனுப்பப்பட்டு இருப்பதுடன், விசாரணைக்குழு ஒன்றும் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள், ‘பீகாருக்குச் செல்லும் மனித உரிமை குழு, ஏன் குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு செல்வதில்லை?’ என்று கேள்வி எழுப்பியதுடன் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பிலும் ஈடுபட்டனர்.

சீன விவகாரத்தை திசைத்திருப்ப பல வகைகளிலும் முயற்சி

புதுதில்லி, டிச. 20 - விடுதலைப் போராட்டத்தில் பாஜக- வினர் செய்த தியாகம் என்ன என்று கேள்வி எழுப்பி, அக்கட்சியை விமர்ச னம் செய்ததற்காக, மன்னிப்பு கேட்க முடி யாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கூறிவிட்ட நிலையில், பாஜக எம்.பி.க்கள் செவ்வாயன்று மாநி லங்களவையில் கடும் அமளியில் ஈடு பட்டனர். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்ஸி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே, கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி, சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அப்போது இந்திய ராணுவ வீரர்கள், அவர் களை தடுத்து நிறுத்தியதாகவும் ஊட கங்களில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியா கின. இந்த மோதலில் இருதரப்பிற்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அந்த செய்தி கள் தெரிவித்தன. ஆனால், நரேந்திர மோடி அரசும், இந்திய ராணுவமும் இந்த சம்பவத்தை மறைத்துவிட்டன. ஊடகங் களில் செய்தி வெளியான பிறகு, மறைப்ப தற்கு இனி வழியில்லை என்ற நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 12-ஆம் தேதி, இந்திய ராணுவமானது, எல்லை யில் சீனா நடத்திய ஊடுருவல் முயற்சி குறி த்து அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.  இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கிளப்பி கேள்வி எழுப்பிய நிலையில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், எல்லையில் நடந்த மோதல் உண்மைதான் என்று டிசம்பர் 13 அன்று தெரிவித்தார். 

“அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி யில் டிசம்பர் 9-ஆம் தேதி சீன ராணுவத் தினர் ஊடுருவி ஆக்கிரமிப்பு முயற்சி களை மேற்கொண்டனர். நமது ராணு வத்தினர் சீன ராணுவத்தின் இம்முயற்சி களை எதிர்கொண்டு முறியடித்து அவர் களது நிலைகளுக்கே திரும்பச் செய்த னர். இச்சம்பவம் தொடர்பாக ராஜதந்திர வழிகளில் சீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நமது  நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற் கும் அதை மாற்றி அமைக்கும் முயற்சி களை முறியடிப்பதற்கும் நமது ராணுவ வீரர்கள் உறுதியாக உள்ளனர். இச்சம்ப வத்தைத் தொடர்ந்து டிசம்பர் 11-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடை யேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லை ஊடுருவல் முயற்சிகளை சீன ராணுவம் மறுத்ததுடன் எல்லையில் அமைதி நிலைநாட்டப்படும் எனவும் தெரி வித்தது. இருதரப்பிலும் ராணுவ வீரர் களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இந்த நிகழ்வில் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்படவோ, படுகாயமடையவோ இல்லை என்பதை அவைக்குத் தெரி வித்துக் கொள்கிறேன். நமது ராணுவம் உரிய நேரத்தில் நடவடிக்கையில் இறங்கியதால் சீன ராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கு திரும்பிச் சென்றனர்” என்று அவர் கூறினார்.

எனினும், எல்லையில் நடந்த மோதலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கா மல் மறைத்தது ஏன்? பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்-கை பலமுறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட, சீன உடனான உறவில் சிக்கல் தொடர்வது ஏன்? உண்மையில் என்னதான் நடக்கிறது? என்ற கேள்வி களை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், எல்லையின் பாதுகாப்பு தொடர்பாக நாட்டு  மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இதற்காக எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானத்தையும் கொண்டு வந்தன. ஆனால், நாடாளுமன்ற விவாதத்திற்கு அஞ்சும் மோடி அரசு, கடந்த ஒருவாரமாக தப்பி ஓடிக் கொண்டிருக்கிறது. எதிர்க் கட்சிகளும் இவ்விவகாரத்தைக் கிளப்பி வெளிநடப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் நடந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது பேசிய ராகுல் காந்தி, “சீனா போருக்குத் தயாரா கிறது, ஊடுருவலுக்கு அல்ல. ஆனால், அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள் என்பதை நமது அரசு ஏற்கவில்லை. நமது நிலத்தை சீனா கைப்பற்றியுள்ளது. அவர்கள் நமது வீரர்களை அடிக்கிறார் கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளி வாகவே உள்ளது. ஆனால் அதை நமது  அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது.  லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத் தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வரு கிறது. இந்திய அரசு தூங்கிக் கொண்டி ருக்கிறது” என்று கடுமையாக சாடினார்.

இதையடுத்து பாஜக தலைவர்கள் பலரும், ராகுல் காந்தி மீது பாய்ந்தனர். மோடி அரசு மீதான விமர்சனத்தை, இந்திய ராணுவத்திற்கு எதிரான விமர்ச னமாக திசைத்திருப்பும் முயற்சியிலும் ஈடுபட்டனர். “ராகுலுக்கு சீனாவின் மீதான பாசம் மற்றும் மோடிக்கு எதிரான வெறுப்பு உணர்வு எல்லை மீறிச் சென்று விட்டது” என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூற, “இந்திய ராணு வத்தை அவமதிக்கும் ராகுல் காந்தி நாட்டுக்கே மிகப்பெரிய அவமானம்” என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கொதித்தார். “காங்கிரஸ் கட்சி, நாட்டுக்கு ஆதரவாக இருக்கிறது என்றால், மல்லிகார்ஜூன கார்கே ரிமோட் கண்ட்ரோல் இயக்கப்படவில்லை என்பது உண்மையானால், ராகுல் காந்தியின் கருத்துக்காக அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும்” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா வரிந்து கட்டினார். இவர்களுக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பொதுக்கூட்டத்தில் பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, “காங்கிரஸ் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிரை தியாகம் செய்தார்கள். எங்கள் கட்சித் தலைவர்கள் நாட்டின் ஒற்று மைக்காக தங்களின் உயிரைக் கொடுத்தார்கள். ஆனால், பாஜக-வினர் எதை இழந்திருக்கிறார்கள்.. என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்..?” என்று கேள்வி எழுப்பியதுடன், “பாஜக தலைவர்களின் வீட்டிலுள்ள நாய் கூட  இந்த நாட்டிற்காக எதையும் தியாகம்  செய்யவில்லை.. ஆனால், அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். நாங்கள் (காங்கிரஸ் கட்சி) ஏதாவது சொன்னால் எங்களை தேச விரோதிகள் என அழைக்கிறார்கள்” என்று விளாசியெடுத்தார்.

மேலும், “நமது எல்லையில் சீனா 20 முறை ஊடுருவிவிட்டது. சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கை 18 முறை பிரதமர் மோடி சந்தித்து பேசிவிட்டார். இத்தனைக்கும் கல்வானில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த பின்னர்தான் இந்த 18 சந்திப்புகளும் நடந்திருக்கிறது. ஆனாலும் சீனாவின் ஊடுருவலும் அத்துமீறலும் தொடருகிறது.. அப்படி யானால் என்ன நடக்கிறது? பிரதமர் மோடி வெளியேதான் சிங்கம் போல பேசுகிறார். உண்மையில் எலியைப் போலத்தான் செயல்படுகிறார். இல்லா விட்டால், நாடாளுமன்றத்தில் சீனாவின் அத்துமீறல், ஊடுருவல் குறித்து விவா திக்க பாஜக அரசு ஏன், தயங்குகிறது?”  என்றும் கேள்விகளால் துளைத்தெடுத்தார். கார்கே-யின் இந்த பதிலடி பாஜக-வினரை ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. ராகுல் காந்தியை விட்டுவிட்டு, கார்கே பக்கம் தாவிய பாஜக- வினர், மல்லிகார்ஜூன கார்கே, எங்களை  நாயைக் குறிப்பிட்டு எப்படி விமர்சிக்க லாம் என்று தாவிக் குதிக்க ஆரம்பித்த னர். மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூப்பாடு போடத் துவங்கினர். செவ்வாயன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில், பாஜக எம்.பி.க்கள் அங்கும் இப்பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். 

மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஒன்றிய வர்த்த கத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் வலியுறுத்தினார். “நாகரிகமற்ற வகையில் மனத்தைப் புண்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தி யதற்காக பாஜக-விடமும், நாடாளு மன்றத்திடமும், நாட்டு மக்களிடமும் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று  அவர் கூறினார். “மல்லிகார்ஜூன கார்கே இது போல தரம்தாழ்ந்து பேசியிருப்பார் என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக தமக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து மல்லி கார்ஜூன கார்கே பேசியிருக்க வேண்டும். அவரது இந்த பேச்சு கடும் ஆட்சேபணைக் குரியது” என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். அப்போது, “நான் நாடாளுமன்றத் துக்கு வெளியேதான் பேசினேன். அவ்வாறு வெளியில் பேசிய பேச்சிற்காக, பாஜக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் ஏன், அமளியில் ஈடுபட வேண்டும்?” என்று மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார்.  அத்துடன், “சுதந்திரம் பெற்றதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்று நாட்டின் ஒற்றுமைக்காக உங்களில் யார் நாட்டிற்காக உயிரிழந்தார்கள்; இந்த கேள்வியை நான் மீண்டும் எழுப்பு கிறேன்” என்று கூறிய கார்கே, “நான் பாஜக-விடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்றும் அதிரடியாக கூறி னார்.

குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரும், “மல்லிகார்ஜூன கார்கே-வின் கருத்து நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறப்பட்டதால், அதனை இங்கு எழுப்ப வேண்டியதில்லை” என்று கூறினார். “நாட்டிலுள்ள 135 கோடி மக்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெளி யில் யாரோ எதையோ பேசியிருக்கலாம். அதற்காக பிடிவாதம் பிடிக்க நீங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை” என்று சமாதானம் செய்தார். ஆனால் பாஜக எம்.பி.க்கள் கேட்பதாக இல்லை. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி. க்களும் பாஜக-வுக்கு எதிராக முழக்கங் களை எழுப்பினர். இதனால் கூச்சலும்  குழப்பமும் நிலவியதால் மாநிலங்க ளவை ஒத்திவைக்கப்பட்டது.