states

img

ஹிஜாப் வழக்கு அமர்வில் பெண்ணுரிமை குறித்த புரிதலற்ற நீதிபதி?

பெங்களூர், பிப்.23- கர்நாடக மாநில பாஜக அரசானது, ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடையை எதிர்த்து, உடுப்பி மாவட்ட இஸ்லாமிய மாணவியர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளனர். கடந்த வாரம் இந்த வழக்கு கிருஷ்ணா தீக்சித் தலைமையிலான தனி நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்து விட்ட நீதிபதி கிருஷ்ணா தீக்சித், வழக்கை மூன்று நீதிபதிகள் அமர் வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.  

அதனடிப்படையில், தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கள் கிருஷ்ணா தீக்சித், காசி ஜாய் புனியா மொஹிதீன் அமர்வு ஹிஜாப் வழக்கைத் தற்போது விசாரித்து வரு கிறது. “வழக்கு விசாரணை முடியும் வரை பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த ஆடைகளை அணியக் கூடாது” எனவும் இந்த அமர்வு உத்தர விட்டுள்ளது. இதனிடையே, ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான கிருஷ்ணா தீட்சித்தை விமர்சித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் அகிம் சாவை, கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். கன்னட நடிகர் சேத்தன் குமார் அகிம்சா, முற்போக்கான சிந்தனை கொண்டவர். மதவெறியர்களுக்கு எதிராக தொடர்ந்து தனது கருத்துக் களை துணிச்சலுடன் வெளிப்படுத்தி வருபவர். அந்த வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 7.ஆம் தேதி டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.  அதில், “கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்சித், பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில், குற்றவாளியான ராகேசுக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளார். ‘வல்லு றவுக்குப் பின் இந்திய பெண் ஒருவர் தூங்குவது பொருத்தமற்றது. எப்படி ஒருவரால் தூங்க முடியும்?’ என வழக் கில் அவர் கேட்டுள்ளார்.

இது 21-ஆம் நூற்றாண்டிலும், நீதிபதி தீக்சித்திற்கு பெண் மீதுள்ள வெறுப்பையே காட்டு கிறது’’ என கூறியிருந்தார். இது அப் போதே நீதித்துறை வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போதைய ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் அமர் விலும் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் இடம்பெற்றுள்ளதால், தனது 2020- ஆம் ஆண்டு டுவிட்டர் பதிவைக் சுட்டிக் காட்டி, புதிய கருத்துப் பதிவை சேத் தன் குமார் வெளியிட்டார். “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக உயர்நீதிமன்ற முடிவு குறித்து பதிவிட்டு இருந்தேன். அப்போது நீதி பதி கிருஷ்ணா தீக்சித் வல்லுறவு வழக்கு ஒன்றில் கவலையளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந் தார். தற்போதும் அந்த நீதிபதிதான் அரசுப் பள்ளிகளில் ஹிஜாப்பை ஏற்று கொள்ளலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க உள்ளார். இந்த விவகாரத்தில் அவருக்கு சரியான புரி தல் இருக்கிறதா?’’ என்று அந்த பதி வில் கேள்வி எழுப்பியிருந்தார்.  இது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற் படுத்தியது. சேத்தன் குமாருக்கு ஆதர வாகவும், எதிராகவும் சமூகவலை தளங்களில் வாதங்கள் சூடுபிடித்தன. இந்நிலையில், சேஷாத்திரிபுரம் போலீசார் தாமாக முன்வந்து சேத்தன் குமார் அஹிம்சா மீது, இந்திய தண் டனை சட்டம் 505 (2)-இன் படி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கருத்து வெளியிடுதல், 504-இன் படி வேண்டுமென்றே ஒருவரை அவம தித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக் குப் பதிந்து அவரை கைது செய்துள்ளனர்.