புதுதில்லி, டிச. 23 - காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாஜகவினரின் மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்ற பெய ரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னி யாகுமரியில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கிவைத்த இந்த நடைபயணம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ் டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என 100 நாட்களைத் தாண்டி தற்போது ஹரியானாவில் நுழைந்துள்ளது. 3750 கி.மீ. தூரத்தை 150 நாட்களில் கடக்கத் திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி, தினமும் 20 முதல் 30 கி.மீ. தூரம் நடக்கிறார். அவரது இந்த பயணத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருக ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர், ராகு லின் நடைபயணத்தில் பங்கேற்று வருகின்றனர். ராகுலின் நடைபயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உ.பி. மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாநில முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே, சிவ சேனாவைச் சேர்ந்த ஆதித்ய தாக்கரே, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி, கல்வியா ளர்கள்,
பொருளாதார வல்லுநர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாது காப்பு படை வல்லுநர்கள் என ஏராள மான பிரபலங்களும் பங்கேற்று வரு கின்றனர். பொருளாதார அறிஞர் ரகுராம் ராஜன், கிரிக்கெட் வீரர் அசாருதீன், திரைப்பட நடிகர் அமோல் பாலேகர், நடிகைகள், பூஜா பட், ரியா சென், ரேஷ்மி தேசாய், பூனம் கபூர், ஸ்வாரா பாஸ்கர் உள்ளிட்டோரும் ஏற்கெனவே பங்கேற்றனர். இதனிடையே, திமுக மாநில மகளிரணி தலைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ஹரி யானா மாநிலம், சோனா அருகே கெர்லி லாலா பகுதியில் ராகுல் நடைப் பயணம் மேற்கொண்டபோது, அந்த நடைபயணத்தில் கலந்து கொண்டார். சிறிது தூரம் ராகுலுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட கனி மொழி, வழிநெடுகிலும் வரவேற்பு அளித்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார். ராகு லின் நடைபயணத்திற்கு தனது ஆதர வையும் தெரிவித்தார். இந்நிலையில், சனிக்கிழமையன்று (டிசம்பர் 24) தில்லியில் தொடரும் நடைபயணத்தில் புகழ்பெற்ற நடிக ரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். கமல்ஹாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர் களும் சுமார் 500 பேர், ராகுல் காந்தி யின் நடைபயணத்தில் இணை வார்கள் என்று கூறப்படுகிறது.