states

img

வினாத்தாள் கசிவு மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஜார்க்கண்டில் பாஜக பிரச்சாரம்

ராஞ்சி 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நவம்பர் 13 அன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 20 அன்று மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சா ரத்தில் ஜார்க்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன்,”தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் நிகழும் வினாத்தாள் கசிவு மூலம் கிடைக்கும் பணத்தை ஜார்க்கண்ட் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு பாஜக பயன்படுத்தி வருகிறது” என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தேர்தல் பிரச்சார மேடையில் அவர் மேலும் கூறுகையில், “ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவிடம் இருந்து நீங்கள் (மக்கள்) பார்க்கும் ஆடம்பரமும், நிகழ்ச்சியும் பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்த வினாத்தாள் கசிவு மூலம் கிடைத்த பணம் ஆகும்.  மோடி பிரதமர் ஆன பின்பு கோழி  திருட்டு வழக்குகளை கூட விசாரிக்கும் அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான முக்கிய பிரச்சனையான வினாத்தாள் கசிவை பற்றி ஏன் விசாரிக்கவில்லை? ஏனென் றால் வினாத்தாள் கசிய விடுவது பாஜகதான்.  அதனால் தான் மத்திய அமைப்பு கள் வினாத்தாள் கசிவை கண்டு கொள்ளாமல் உள்ளன” என அவர் பேசினார்.