states

img

திரிபுரா எதிர்க்கட்சித் தலைவராக ஜிதேந்திர சவுத்திரி நியமனம், ஏன்?

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் ஜிதேந்திர சவுத்திரி எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி மீது மக்கள் மத்தியில் கடுமை யான அதிருப்தி நிலவியதால், திப்ரா மோதா கட்சி தனித்துக் களம் கண்டது. பாஜகவின் ரகசியக் கூட்டணிக் கட்சியாக இது இருக்கிறது என்று இடது முன்னணி குற்றம் சாட்டியது. தேர்தலின்போது பாஜகவும், திப்ரா மோதாவும் அதை மறுத்தன.  சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெற்று ஓராண்டு கடந்த நிலையில், மாநில அரசில் அமைச்சர்களாக திப்ரா  மோதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கள் சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டுள் ளார்கள். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில், இடதுமுன்னணி - காங்கிரஸ் இடையேயான இந்தியா கூட்டணி வலுவான முறையில் களம் காணும் நிலை யில், பாஜகவும் திப்ரா மோதாவும் தனித்தனியாக நின்றால் கடினம் என்பதை உணர்ந்து, தங்களது ரகசியக் கூட்டணியை பகிரங்க கூட்டணியாக அறி விக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள் ளது. இந்தப் பின்னணியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திப்ரா  மோதாவின் அனிமேஷ் தேப் பர்மா, பதவி விலகி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக் கிறார். அரசில் பங்கேற்றுள்ளதால், திப்ரா மோதா கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கியிருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என்று சபாநாயக ருக்கு, இடது முன்னணி கடிதம் எழுதியது.  ரகசியக் கூட்டு அம்பலமாகிவிட்டதால், வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த சபாநாயகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் ஜிதேந்திர சவுத்திரியை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளார். திப்ரா மோதா கட்சியின் நிறுவனர் பிரத்யோத் கிஷோர் தேப் பர்மாவின் சகோதரி, கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.