states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக ஒடிசா மாநிலத்தில் பெண்கள் சனிக்கிழமை அன்று பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

நடப்பாண்டில் கேரளாவில் மே 27இல் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் 1இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், தற்போது முன்கூட்டியே தொடங்க உள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மே 13ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. அதே போல அந்தமான் பகுதியில் மே 4ஆவது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சலால் அணை திடீரென திறப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடை யேயான போர் பதற்றம் தீவிர மடைந்துள்ளது. இரு நாடுக ளும் எல்லைப் பகுதியில் மாறி மாறி  தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ரியாஸ் பகுதியில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதே போல செனாப் ஆற்றின் குறுக்கே உள்ள பக்லிஹார் நீர் மின் திட்ட அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. சலால் அணையின் 5 மதகுகள் வழியே அதிக அளவிலான தண்ணீரை இந்திய அதிகாரிகள் திறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவும் சூழலில் அணைக ளில் இருந்து அதிக அளவில் தண்ணீர்  திறந்துவிடப்பட்டுள்ளதால் பாகிஸ்தா னில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன. பதற்றமான சூழலில் இதுபோன்று வெள்ள நீரை திறந்துவிடுவதன் மூலமாக இது பாகிஸ்தான் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக கருதப்படுவதாகவும் சொ ல்லப்படுகிறது. ஆனாலும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

வடமேற்கு ரயில்வே  சேவை நிறுத்தம்

போர் பதற்றம் காரணமாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தானின் சர்வதேச எல்லைகளுக்கு அருகில் உள்ள பார்மர், ஜோத்பூர் மற்றும் முனாபாவில் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், வடமேற்கு ரயில்வே சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வடமேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சசி கிரண் கூறுகையில்,”வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ நிலைகளை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்று வருகிறது. தற்போதைய போர் பதற்றங்களுக்கு மத்தியில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பது, எல்லையில் மின்தடை மற்றும் அவசரகால நிலைமைகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  வட மேற்கு ரயில்வே சேவை நிறுத்தப் பட்டுள்ளது” என அவர் கூறினார்.

தில்லியில்  60 விமானங்கள் ரத்து

இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் போர் நிறுத்தத்தை அறிவித்தன. எனினும் சனிக்கிழமை முழுவதும் தில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயினும் தில்லி விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளில் பாதிப்பு இல்லை என இந்திய விமான நிலைய ஆணையம் தகவல் தெரிவித்தது.