states

img

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் தில்லி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா!

புதுதில்லி, பிப். 28 - சிபிஐ வழக்குகள் தொடர்ந்துள்ள பின்னணி யில், தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் தங்க ளின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தில்லியில் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கு, பல வகைகளி லும் ஒன்றிய பாஜக அரசு இடையூறு கொடுத்து வரு கிறது. ஆளுநர் மூலமாக வும், அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்பு கள் மூலமாகவும் இந்த வேலையைச் செய்து வரு கிறது. கடந்த 2017-இல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்,  தில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2021 மே 30- அன்று, சத்யேந்திர ஜெயினை சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதும் செய்தது. அவர் தற்போது வரை சிறையில் இருந்து வருகிறார். இதற்கு அடுத்ததாக, அரசு மதுபான கொள்கை களைத் தளர்த்தி தனியா ருக்கு மதுக்கடை உரிமங் களை வழங்கிய விவகா ரத்தில், தில்லி துணைமுதல் வர் மணீஷ் சிசோடியா மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, அவரை அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியது. இந்த விசார ணைக்குப் பின் சிசோடியா வையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட சிசோடியாவை மார்ச் 4-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தனக்கு ஜாமீன் கோரி, மணீஷ் சிசோடியா செவ்வா யன்று உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அங்கு  அவருக்கு ஜாமீன் கிடைக்க வில்லை. இந்தப் பின்னணியில், மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.