states

img

ஜஹாங்கிர் புரி கட்டிட இடிப்பின் போது கலங்க வைத்த சிறுவன்

டெல்லியில் இன்று ஆக்கிரமிப்பு இடங்கள் என்று கூறி ஜஹாங்கிர்புரி பகுதியில் பல்வேறு கட்டிடங்களை இடித்த போது சிறுவன் செய்த செயல் அப்பகுதி மக்களை கலங்க  வைத்தது. 
தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி என்ற இடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு தரப்புக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலில், 8 போலீசார் உட்பட 9 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இதுவரை சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, டெல்லி வடக்கு மாநகராட்சி மேயருக்கு எழுதிய கடிதத்தில், கலவரம் நடந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை முதல் திட்டமிட்டு இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை டித்து வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் புல்டோசரை மறித்து நின்று எதிர்ப்பு தெரிவித்தார். 
இதற்கிடையில் தில்லியில் இடிக்கப்பட்ட தனது அப்பாவின் கடையின் கீழே சிதறிக்கிடக்கும் சில்லறை காசுகளை கண்ணீர் விட்ட படி சிறுவவன் எடுக்குகும் நிகழ்வு பலரையும் அதிர வைத்தது.  எல்லாம் இடிக்கப்பட்ட நிலையில் காங்கிரீட் குப்பைகளுக்கு இடையில் சிதறிக்கிடந்த ஜூஸ் பாட்டில்களையும் சிறுவன் பொறுக்கி எடுத்துக்கொண்டு இருந்தான். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. 
திட்டமிட்டு ஒன்றிய அரசு ஹனுமன் ஜெயந்தி கலவரத்தை காரணம் காட்டி இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது.