states

img

டுவிட்டரில் திடீரென பாஜக பெயர், மோடியின் படம் நீக்கம் மீண்டும் காங்கிரஸில் இணைகிறாரா ஜோதிராதித்யா சிந்தியா?

போபால் மே, 21- ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை  அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா திடீ ரென தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத் தில் கவர் படம், பயோ போன்றவற்றில் பாஜகவின் பெயரை நீக்கி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2018 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்று, முதல்வராக கமல்நாத் தேர்வு  செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் பதவி ஆசை மற்றும் கமல்நாத் உடனான மோதல் காரணமாக ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பெரும்பான்மை இல்லாததால் அடுத்த  ஓராண்டில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலை யில், மீண்டும் மத்திய பிரதேசத்தில் பாஜக  ஆட்சி அமைந்து சிவராஜ் சிங் சவுஹான்  முதல்வராக பதவியேற்றார். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்ததற்காக ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஒன்றிய பாஜக அரசு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி அளித்தது.  இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மோடியின் படத்தையும் பாஜகவின் பெய ரையும் திடீரென நீக்கியுள்ளார். ஏற்கெனவே பாஜக தலைமைக்கும் இவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று மத்தியப்  பிரதேச அரசியலில் செய்திகள் டிரெண்ட்  ஆகிய நிலையில், தற்போது டுவிட்டர் பக்கத்  தில் பாஜக பெயர், பிரதமர் மோடியின் படம்  நீக்கம் பலத்த சந்தேகத்தை கிளப்பி யுள்ளது.

காங்கிரஸ் அழைப்பு 

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் சகோதரரும், எம்எல்ஏ-வான  லக்ஷ்மண் சிங், ‘‘நாங்கள் ஜோதிர் ஆதித்யா  சிந்தியாவை தேடுகிறோம். அவர் நல்ல பேச்சாளர். திறமையான அரசியல்வாதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்று தெரிவித்து இருந்தார். இந்த ஆண்டில் தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் காங்கிரஸ் தன் வசம் இழுக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு தாவும்  பாஜக முக்கிய புள்ளிகள்

நடப்பாண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களுடன் மத்தியப் பிர தேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநில  பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் காங்கி ரஸ் கட்சிக்கு தாவி வருகின்றனர். கடந்த  ஒரே வாரத்தில் மத்தியப் பிரதேசத்தின் வலிமை மிக்க பாஜக முக்கிய தலை வர்களில் ஒருவரான தீபக் ஜோஷி, மூன்று முறை எம்எல்ஏ-வான பிரதீப் லாரியா ஆகி யோர் கமல்நாத் முன்னிலையில் காங்கிரஸ்  கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பி டத்தக்கது.